வாணியம்பாடி: போலீஸ்காரரை தாக்கிய லாரி ஓட்டுநர்- என்ன நடந்தது?

வாணியம்பாடி: போலீஸ்காரரை தாக்கிய லாரி ஓட்டுநர்- என்ன நடந்தது?
வாணியம்பாடி: போலீஸ்காரரை தாக்கிய லாரி ஓட்டுநர்- என்ன நடந்தது?

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாணியம்பாடி அருகே பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான 42 வயதுள்ள அருண்பாபு. இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து லாரியில் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்றுள்ளார். அப்போது லாரி  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில்  சென்று கொண்டிருந்தது. அங்கு பணியில் காவலர் சந்தோஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூர் நகரப் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு 8 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று கூறி வாகனத்தை பின்னோக்கி எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளார் காவலர் சந்தோஷ்.
இதனால், பணியில் ஓட்டுனர் அருண் பாபு, போக்குவரத்து காவலர் சந்தோஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கைகலப்பாக மாற, ஓட்டுநர் அருண் பாபு திடீரென காவலர் சந்தோஷை கடுமையாக தாக்கியுள்ளார். சட்டையை கிழித்து, கல்லை எடுத்து காவலர் சந்தோஷ் மீது தாக்க முயன்றுள்ளார். இதனைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், ஓட்டுனர் அருண்பாபுவை பிடித்துவைத்துக் கொண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி., நிலவழகன் தலைமையிலான போலீசார் ஓட்டுநர் அருண்பாபுவை வாணியம்பாடி கிராமிய போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது, அருண்பாபு மது போதையில் காவலர் சந்தோஷை தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து ஓட்டுநர் அருண் பாபு மீது 5 பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com