'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 90 நாட்களில் நிறைவடையும் என்று தகவல்
'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 90 நாட்களில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 'லியோ' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தில், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 90 நாட்களில் முற்றிலும் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்த 3 மாதங்கள் 'போஸ்ட் புரொடக்சன்', அதன்பின் இரண்டு மாதங்களுக்கு ப்ரொமோஷன் என அடுத்த 8 மாதங்கள் பரபரப்பாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிவரும் இத்திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.