தாதா சாகேப் விருது பெற்ற பிரபல இயக்குநர் மறைவு... சோகத்தில் திரையுலகம்

தாதா சாகேப் விருது பெற்ற பிரபல இயக்குநர் மறைவு... சோகத்தில் திரையுலகம்
ஐதராபாத், இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான, கே.விஸ்வநாத்(93), வயது மூப்பின் காரணமாகக் காலமானார். சங்கராபரணம் உள்ளிட்ட பல அற்புதமான படங்களை இயக்கிய, அவரது இழப்பு, இந்தியத் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் முக்கியமானவரான கே.விஸ்வநாத், தெலுங்குத் திரையுலகத்தில் பல அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியவர். 1965ம் ஆண்டில், இயக்குநராக அறிமுகமாகி, தான்  இயக்கிய முதல் படமான ‛ஆத்ம கவுரவம்' படத்துக்குச் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். அடுத்தடுத்து பல தெலுங்கு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். தெலுங்கு மட்டும் இன்றி, தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.

‛சங்கராபரணம், சாகர சங்கமம்ஸ்ரீவெண்ணிலாஸ்வாதிமுத்யம்சூத்ரதாரலுஸ்வராபிஷேகம்' உள்ளிட்ட  53 படங்களை இயக்கியுள்ளார். இவருடைய  படங்கள் பல காலத்தைக் கடந்தும்  ரசிகர்களால் பாராட்டப்படுபவை. தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய ஹிட்டான படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், தமிழில், ‛குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனிலிங்கா, உத்தம வில்லன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்தம் திரையுலக தொண்டினை பாராட்டும் விதமாக, இந்திய திரைத்துறையின் உயரிய விருதான ‛தாதா சாகேப் பால்கே விருது’ மற்றும் ‛பத்ம ஸ்ரீ’விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது, 11 முறை பிலிம் பேர் விருது வென்றுள்ளார்.‛கலா தபஸ்வி' எனவும் திரையுலகில் அழைக்கப்பட்டார். 

இந்நிலையில் 93 வயதான மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத், வயது மூப்பு காரணமாகக் கடந்த சில காலமாகவே, சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு, டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து  நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ளனர். மேலும் இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும், சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்