வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. இந்த படத்தின் அறிவிப்பை படக்குழு கடந்த ஆண்டே அறிவித்தது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. இந்த படத்தின் அறிவிப்பை படக்குழு கடந்த ஆண்டே அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் உள்ளது.
இந்நிலையில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்தி இணைந்து நடிக்கவுள்ள படத்தின் அறிவப்பை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்தது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாநாடு படத்திற்காக உடல் இளைப்பதற்காக சிம்பு கடந்த சில மாதங்களாக லண்டனில் தங்கியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பமிப்பதாக தெரியவில்லை. இதனால் மாநாடு படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் மே மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.