சினிமா
முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு வெற்றி...!
முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு வெற்றி...!
அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மற்றும் ஜானி டெப் காதல் வயப்பட்டு 2015ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.
இதையடுத்து 2018ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் ஜானி டெப்பின் கையை விட்டுச் சென்றன. இதனால் அவதூறாக 380 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப் ஆம்பர் மீது வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் தற்போது ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஆம்பர் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.