எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவுள்ள புது படத்தின் நாயகனாக நடிகர் ஜெய் நடிக்கவுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவுள்ள புது படத்தின் நாயகனாக நடிகர் ஜெய் நடிக்கவுள்ளார்.
’சட்டம் ஒரு இருட்டறை’, ’நான் சிகப்பு மனிதன்’, ’வசந்த ராகம்’ என பல படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்திரசேகர். இவர் கடைசியாக இயக்கிய படம் ’டூரிங் டாக்கீஸ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, சந்திரசேகரே நாயகனாக நடித்தார்.இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது.
அதன்பிறகு இயக்கத்திற்கு சின்ன ப்ரேக் விட்ட அவர் ’நையப்புடை’, ’கொடி’, ’டிராஃபிக் ராமசாமி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்கும் பணியில் இறங்கவுள்ளாராம் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் படப்பிடிப்பு வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தகவம் வெளியாகியுள்ளது.