தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, சூர்யா 40 படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம்.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை இயக்குநர் புகழ் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியை 100-க்கும் அதிகமான துணை நடிகர்களை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தற்போது படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது இதர காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது.