2 மணி நேரம் பரபரப்பை கிளப்பிய 28 வயது இளைஞர்

தனது மனைவி தன்னை மதிப்பதில்லை என்று கூறி, கணவன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (28).இவர் கூலி தொழிலாளி ஆவார்.இவரது மனைவி ஜெயா ஆவார்.இந்நிலையில் ஜெபராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாளன்று மீண்டும் அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஜெபராஜ், தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனது மனைவி தன்னை மதிப்பதில்லை என்று கூறி அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிரள வைத்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனே இது குறித்து காவல் நிலையத்திற்கும்,தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் ஜெபராஜ்ஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக கீழே இறக்கினர்.கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜமான ஒன்று தான்.தற்போது மக்கள் வித்தியாமான முறையில் மிரட்டல் விடுத்தது வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
சென்னை சூப்பர் கிங்ஸ்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்