தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகுதான் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகுதான் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் ஐ ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படக்குழுவில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சென்னையில் தனது வீட்டில் ஓய்வில் உள்ளார்.
இதனை தொடர்ந்து தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரசியலில் ஈடுப்பட போவதில்லை என்று ரஜினி அறிவித்தார். இதனால், 'அண்ணாத்த' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், தேர்தலுக்குப் பிறகு சென்னையிலேயே 'அண்ணாத்த' படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்த பிறகே இப்பட வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.4% -
அனுபவக் குறைவு
24.39% -
கிரிக்கெட் அரசியல்
35.54% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.67%