தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் வெளியான சர்கார் படம் பல சர்ச்சைகளை கடந்து வெற்றி பெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் வெளியான சர்கார் படம் பல சர்ச்சைகளை கடந்து வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சின்ன பிரேக் எடுத்த கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் மலையாளம், தெலுங்கு என பிஸியாகிவிட்டார்.
இவர் தற்போது மலையாளத்தில் வரலாற்று படமாக உருவாகி வரும் மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இவர் ஹிந்தியில் அமித்சர்மா இயக்கத்தில் உருவாகவுள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவர் அஜய் தேவ்கனின் மனைவியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் மாதம் தொடங்கவுள்ளது. பாலிவுட்டிற்கு செல்லும் கீர்த்தி சாதிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.