தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி!!

தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி!!

தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதம் காலமாக தியேட்டர்கள் அனைத்தும் மூட பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் தயாரிப்பில்  'பொன்மகள் வந்தாள்' ஓடிடி தளத்தில் வெளியானது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி போன மாதம் "பொன்மகள் வந்தாள்" திரைப்படம் வெளியானது. அதேபோல் இன்று பென்குயின் படமும் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் கடும் மோசமான வரவேற்பை பெற்றது. இதனை கண்டு தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதனால் ஓடிடி தளத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தியயேட்டர் உரிமையாளர்கள் அவர்களது வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகிறார்களாம்.
இதனை தொடர்ந்து, கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தியேட்டருக்கு மக்கள் நிச்சியம் வருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com