4 மொழிகளில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி, பாகுபலி-2 படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்ற புதிய படம் தயாராகி வருகிறது. 300 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இப்படம், இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் கதையாகும். 1920களின் பின்னணியில் உருவாகும் இப் படத்தில் அல்லூரி சீதாராமாக ராம் சரணும், கோமரம் பீம்மாக ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரகனியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 4 மொழிகளில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.