மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் ஆண்ட்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் நடிகர் விஜய்க்கு நன்றியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “129 நாட்கள் இடைவெளியில்லாமல் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் பயணம் எனது இதயத்துக்கு நெருக்கமானது. என்னையும், எனது குழுவையும் நம்பியதற்கு நன்றி விஜய் அண்ணா. என்னுடைய குழு இல்லாமல் இத்தனை பெரிய பணியை செய்திருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்