வடிவேலு நாயகனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ’இம்சை அரசன் 23ம் புலிகேசி.
வடிவேலு நாயகனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் ’இம்சை அரசன் 23ம் புலிகேசி. இந்நிலையில் மீண்டும் வடிவேலை வைத்து 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகத்தினை எடுக்க இயக்குநர் சிம்புதேவன் முடிவு செய்திருந்தார். இதற்கான படப்பிடிப்பும் தொடங்கி பாதியில் நின்றது. அந்த பிரச்சனை ஓயாமல் இருக்க, அவர் விஜய்யின் மெர்சல் படத்தில் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடித்தார். அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகவுள்ள ’பேய் மாமா’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் காமெடி மற்றும் ஹாரர் ஜானரில் உருவாகவுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.