ராஜு குமரேசன்.''என்னோட பப்பாளி மரத்துல இலைகள் மஞ்சள் நிறமா மாறி தலைகீழா தொங்குது. இது என்ன நோய்? இதை எப்படி சரி செய்றது?'' எனக் கேட்டிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சாப்ளின் பாலு. அவரது கேள்விக்கான பதிலைச் சொல்கிறார் பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம்..''பொதுவா பயிரில் நோயை உருவாக்குற கிருமிகள் 3 வகைப்படும். பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ்ன்னு சொல்ற நச்சுயிரி. இந்த 3 மூலமாகத்தான் நோய்கள் உருவாகும். இதுல பூஞ்சாணம், பாக்டீரியா ரெண்டும் விதை, காற்று, மண், தண்ணீர் மாதிரியான உயிரற்ற பொருள் மூலமாகப் பரவும். ஆனா, வைரஸ் மட்டும் உயிருள்ள பொருள் மூலமாகத் தான் பரவும். உயிருள்ள பொருளோட உடம்புக்குள்ள தான் வைரஸ் வேலை செய்யும். வெளியே வந்தா செத்துப்போகும். பல நேரங்கள்ல பாதிக்கப்பட்ட பொருள்ல வைரஸ் இருக்குறதே தெரியாது. உதாரணமா சொறி, படை, சிரங்கு மாதிரியான நோய் பூஞ்சாணத்தால வர்றது. அது உடனே வெளியே தெரியும். வயிற்றுப்போக்கு, பாக்டீரியானால வர்றது அதுவும் உடனே தெரிஞ்சு போகும். ஆனா, சளி, காய்ச்சல் உடனே தெரியாது. உள்ளே உருவாகி, உடம்புக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகு தான் வெளியே தெரியும். இது வைரஸ்னால வர்றது. இந்த மூனு கிருமிகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பயிர்கள்ல நோய் உருவாக்குற வைரஸ், பூச்சிகளுக்கு நோய் உருவாக்குற வைரஸ், மனிதர்களுக்கு நோய் உருவாக்குற வைரஸ்னு 3 வகை வைரஸ் இருக்கு. இது ஒவ்வொன்னும் அதோட வேலையைத் தான் செய்யும். மற்றதை பாதிக்காது. உதாரணமா பயிர்கள்ல நோய் உருவாக்குற வைரஸ் இருக்குற செடியை ஒரு பூச்சி திங்குது. உடனே அந்த வைரஸ் பூச்சியை எதுவும் பண்ணாது. பூச்சியோட வயித்தை கிடங்கா மாத்தி அங்க குடியிருக்க ஆரம்பிச்சிடும். அந்தப் பூச்சி அடுத்த பயிர்ல போய் உக்காந்து வாய் வெச்சா போதும். பூச்சி வயித்துல இருந்து எச்சில் வழியா அந்தப் பயிருக்குப் பரவிடும். ஒரு வயல்ல ஒரு செடி வைரஸ் நோயால பாதிக்கப்பட்டா போதும். அடுத்த 3 நாள்ல மொத்த வயலுக்கும் நோய் பரவிடும். இந்த நிமிஷம் வரைக்கும் வைரஸ் அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்படல..சரி, நாம பப்பாளிக்கு வருவோம்.பப்பாளி வளைய புள்ளி நோய், பப்பாளி தேமல் நோய், பப்பாளி இலை சுருண்டல் நோய்ன்னு சொல்ற 3 வகையான வைரஸ் நோய் தான் பப்பாளியைத் தாக்கும். இந்த நோய்கள் வரக் காரணமா இருக்குறது வைரஸ் தான். ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு, பூச்சி மூலமாகத் தான் வைரஸ் பரவும். பப்பாளியில அந்த வேலையைச் செய்யுறது அசுவினி, வெள்ளை ஈ ரெண்டு பேரும் தான். இவங்களைக் கட்டுப்படுத்திட்டா பப்பாளியில வர்ற பெரும்பாலான நோயைத் தடுத்திடலாம். ஒட்டுப்பொறி மூலமா இவங்களைக் கட்டுப்படுத்தலாம்..பப்பாளி வளைய புள்ளி நோய் பச்சை இலையில நரம்பு போக மத்த இடங்கள் சுருங்கிப் போய் இருக்கும். கீழ் நோக்கி சுருண்டு இருக்கும். மஞ்சள் நிறத்துல தேமல் உருவாகி, கொப்புளம் மாதிரி வெடிச்சு இலை தலைகீழா தொங்கும். ஆரம்பகட்டத்துல இலையைத் தான் பாதிக்கும். போகப் போகப் பூ, பழங்களைப் பாதிக்கும். சில சமயங்கள்ல பழங்கள் உருவாகுறதைத் தடுக்கும். இந்த நோய் வராம தடுக்க நாற்று வாங்கும்போது கவனமா இருக்கணும். நோய் தாக்காத நாற்றா பார்த்து வாங்கணும்..தேமல் நோய் இலையில மஞ்சள் நிறத்துல சின்ன சின்னதா ஆரம்பிச்சு, இலை முழுக்க மஞ்சள் நிறமா மாறிடும். தேமல் நோய் தாக்குன மரத்துல பூ பூக்குறது, காய் காய்க்கிறது பாதிக்கப்படும்..இலை சுருண்டல்இந்த நோய் தாக்குன இலைகள் அதோட ஒரிஜினல் சைஸ் மாறி, இலை விளிம்புகள்ல சுருண்டு, கொத்தா தலைகீழா தொங்கும். பாதிக்கப்பட்ட செடிகளுக்குப் பூ, பழம் கொடுக்குற சக்தி இருக்காது. பாதிக்கப்பட்ட செடிகளை வேரோடு பிடுங்கி, குழி தோண்டி புதைச்சிடணும். வரப்புல மக்காச்சோளம், சோளம் பயிர் பண்ணிட்டு அதுக்குப் பிறகு பப்பாளி நடவு பண்ணுனா பெரும்பாலும் இதுமாதிரி நோய் தாக்காது. அக்கம் பக்கத்துலயோ, பப்பாளிக்கு ஊடுபயிராகவோ பூசணி மாதிரியான கொடி வகை பயிர் இருக்கக் கூடாது. தக்காளி செடி உள்ளே வரக் கூடாது. பொதுவா வைரஸ் தாக்குதலைச் சமாளிக்குற சக்தி வேப்ப மரத்துக்குத்தான் உண்டு. அதுனால தான் அம்மை தாக்குனதும் தலைக்கு வேப்பிலை வெச்சு படுக்குறோம். வேப்பிலை தண்ணியில குளிக்குறோம். பயிர்களுக்கும் அதுதான் வைத்தியம். வைரஸ் தாக்குன பயிர்கள்ல வேப்பங்கொட்டை+வெள்ளைப்பூண்டு கரைசல் தெளிச்சா ஓரளவு தீர்வு கிடைக்கும். வேப்பங்கொட்டை+வெள்ளைப்பூண்டு கரைசல் தயாரிக்க 5 கிலோ வேப்பங்கொட்டை, அரை கிலோ வெள்ளைப்பூண்டு ரெண்டையும் எடுத்து அம்மியில வெச்சு நல்லா அரைச்சுக்கணும். அதை ஒரு வெள்ளைத்துணியில கட்டி, 10 லிட்டர் நாட்டுமாட்டு கோமியத்துல ஒருநாள் முழுக்க ஊற வைக்கணும். பிறகு, அதை வடிகட்டி எடுத்து அதுல 100 கிராம் காதி சோப்பை கரைச்சு விடணும். இதுதான் வேப்பங்கொட்டை+வெள்ளைப்பூண்டு கரைசல். இதை 90 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கலாம்". தொடர்புக்கு : நீ. செல்வம் : 94435 38356.செம்மண் சரளையில் என்ன பயிர் செய்யலாம்?என்னோடது செம்மண் சரளை வகை நிலம். கிணற்று நீர் பாசனம். ஆனி மாசம் கொத்தமல்லி தழைக்காகப் பயிர் செய்யலாமா? வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, செடி அவரை, மிளகாய், செண்டுமல்லி போன்றவை பயிர் செய்யலாமா? இந்த மாதம் எவ்வகையான பயிர் செய்வது நல்ல பலன் தரும்? என்று கேட்டுள்ளார் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ். அவரது கேள்விக்கு விளக்கமளிக்கிறார் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ்,. ''நீங்க சொன்ன நிலத்துல, நீங்க சொன்ன பயிர்கள் எல்லாமே பயிரிடலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை. பொதுவா சரளை மணல் நிலத்துல தழைச்சத்து இருக்காது. மண்ணுல ஒட்டக்கூடிய தன்மை இருக்காது. எந்தப் பொருளைக் கொடுத்தாலும் ஒட்டணும். ஆனா, அந்த மண்ணுல ஒட்டுற மட்குப்பொருளோட அளவு ரொம்ப கம்மியா இருக்கும். உதாரணத்துக்குக் கொத்தமல்லியை தழைக்காகச் சாகுபடி பண்ணும்போது அங்க தழைச்சத்து அதிகமா இருக்கணும். மண்ணுல நீங்க கொடுக்குறதை பயிருக்கு எடுத்துக் கொடுக்கணும். .மணலுக்கு இடையில இருக்குற ஓட்டையோட அளவு பெருசா இருக்கும்போது தண்ணி கொடுத்தா, ஒரு மணி நேரத்துல தண்ணி படபடன்னு இறங்கி கீழே போயிடும். அதேமாதிரி நீங்க கொடுக்குற இடுபொருட்களையும் எடுத்துட்டு போயிடும். வேர் இருக்குறது மேல. இடுபொருட்கள் கீழே போயிடுச்சுன்னா நமக்குப் பிரயோஜனம் இல்லாம போயிடும். அதனால ஒரு தடவையாவது சணப்பு, தக்கைப்பூண்டு ரெண்டும் சேர்த்து 25 கிலோ வர்ற அளவுக்குத் தூவிவிடுங்க. அதை முறையா விவசாயமா பண்ணி, 55 நாள்ல மடக்கி உழுதுட்டு அதுக்கப்பறம் 10 நாள் விட்டு அடுத்த விவசாயத்தை ஆரம்பிங்க..அடுத்து, கையில போதுமான அளவு இடுபொருட்கள் வெச்சுக்கணும். இத்தனை பயிர் சொல்றீங்க. தேவையான மீன் அமிலம், இ.எம். கரைசல் ரெண்டும் கையில இருக்கணும். இ.எம். கரைசல் கொடுக்கக் கொடுக்க மண்ணு உடைஞ்சு கொடுத்து, தூளாகும். இதை ஒரு வருஷத்துல நீங்க உணர முடியும். ஈரம் நிக்குற அளவு நல்லாருக்கும். அதுக்குக் காரணம் இ.எம். கரைசல் தான். மாசம் ரெண்டு தடவை ஜீவாமிர்தம் கொடுக்கணும். உயிர் உரமான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் வேணும். பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா இதெல்லாம் கையில வச்சுக்கணும். ஒரு ஏக்கருக்கு, ஒரு மாசத்துக்கு 30 கிலோ சாம்பல் போடணும். அப்படி போட்டுட்டு பொட்டாஷ் சிமுலைசிங் பாக்டீரியா போட்டோம்னா சூப்பரா இருக்கும். பாஸ்போ பாக்டீரியா ஆரம்பகாலத்துல ஒரு லிட்டரும், பூக்க ஆரம்பிச்ச பிறகு 2 லிட்டரும் கொடுக்கணும். 15 நாளைக்கு ஒரு தடவை கொடுக்கணும்..நீங்க சொல்லியிருக்க பயிர்கள் எல்லாம் ஒரே அளவு தண்ணீர் தேவைப்படுற பயிர்கள்தான். அதுனால பிரச்சனையில்ல. வேலையாட்களைப் பொறுத்து எது கம்மியா போடலாம், எது கூட போடலாம்னு பார்த்து பண்ணுங்க. வேலியைச் சுத்தி 5 அடிக்கு ஒரு ஆமணக்கு நடுங்க. அது ரொம்ப முக்கியம். அதேமாதிரி வேலிகள்ல தட்டைப்பயிறு நடுறதும் ரொம்ப நல்லது. சூரிய ஒளியில இயங்கக்கூடிய விளக்குப்பொறி ஒன்னோ ரெண்டோ வாங்கி வைங்க. மஞ்சள் நிற ஒட்டும் அட்டை 20 எண்ணிக்கையில வாங்கி வைங்க. கட்டமைப்பைச் சரியா வச்சு செஞ்சீங்கன்னா நிச்சயம் முழுமையான வெற்றி கிடைக்கும். நாட்டு விதை வேணும்னா பெங்களூர்ல IIHR(Indian Institute of Horticulture Research - Bangalore) -ல நெட்ல போட்டு வாங்கிக்கங்க. இல்ல ஹைப்ரிட் ரகங்கள்னா பாக்கெட் விதையை வாங்கிடுங்க. எதுனாலும் நல்ல விதையா கேட்டு வாங்கிக்கங்க". தொடர்புக்கு : பிரிட்டோ ராஜ் : 99444 50552
ராஜு குமரேசன்.''என்னோட பப்பாளி மரத்துல இலைகள் மஞ்சள் நிறமா மாறி தலைகீழா தொங்குது. இது என்ன நோய்? இதை எப்படி சரி செய்றது?'' எனக் கேட்டிருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சாப்ளின் பாலு. அவரது கேள்விக்கான பதிலைச் சொல்கிறார் பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம்..''பொதுவா பயிரில் நோயை உருவாக்குற கிருமிகள் 3 வகைப்படும். பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ்ன்னு சொல்ற நச்சுயிரி. இந்த 3 மூலமாகத்தான் நோய்கள் உருவாகும். இதுல பூஞ்சாணம், பாக்டீரியா ரெண்டும் விதை, காற்று, மண், தண்ணீர் மாதிரியான உயிரற்ற பொருள் மூலமாகப் பரவும். ஆனா, வைரஸ் மட்டும் உயிருள்ள பொருள் மூலமாகத் தான் பரவும். உயிருள்ள பொருளோட உடம்புக்குள்ள தான் வைரஸ் வேலை செய்யும். வெளியே வந்தா செத்துப்போகும். பல நேரங்கள்ல பாதிக்கப்பட்ட பொருள்ல வைரஸ் இருக்குறதே தெரியாது. உதாரணமா சொறி, படை, சிரங்கு மாதிரியான நோய் பூஞ்சாணத்தால வர்றது. அது உடனே வெளியே தெரியும். வயிற்றுப்போக்கு, பாக்டீரியானால வர்றது அதுவும் உடனே தெரிஞ்சு போகும். ஆனா, சளி, காய்ச்சல் உடனே தெரியாது. உள்ளே உருவாகி, உடம்புக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகு தான் வெளியே தெரியும். இது வைரஸ்னால வர்றது. இந்த மூனு கிருமிகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பயிர்கள்ல நோய் உருவாக்குற வைரஸ், பூச்சிகளுக்கு நோய் உருவாக்குற வைரஸ், மனிதர்களுக்கு நோய் உருவாக்குற வைரஸ்னு 3 வகை வைரஸ் இருக்கு. இது ஒவ்வொன்னும் அதோட வேலையைத் தான் செய்யும். மற்றதை பாதிக்காது. உதாரணமா பயிர்கள்ல நோய் உருவாக்குற வைரஸ் இருக்குற செடியை ஒரு பூச்சி திங்குது. உடனே அந்த வைரஸ் பூச்சியை எதுவும் பண்ணாது. பூச்சியோட வயித்தை கிடங்கா மாத்தி அங்க குடியிருக்க ஆரம்பிச்சிடும். அந்தப் பூச்சி அடுத்த பயிர்ல போய் உக்காந்து வாய் வெச்சா போதும். பூச்சி வயித்துல இருந்து எச்சில் வழியா அந்தப் பயிருக்குப் பரவிடும். ஒரு வயல்ல ஒரு செடி வைரஸ் நோயால பாதிக்கப்பட்டா போதும். அடுத்த 3 நாள்ல மொத்த வயலுக்கும் நோய் பரவிடும். இந்த நிமிஷம் வரைக்கும் வைரஸ் அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்படல..சரி, நாம பப்பாளிக்கு வருவோம்.பப்பாளி வளைய புள்ளி நோய், பப்பாளி தேமல் நோய், பப்பாளி இலை சுருண்டல் நோய்ன்னு சொல்ற 3 வகையான வைரஸ் நோய் தான் பப்பாளியைத் தாக்கும். இந்த நோய்கள் வரக் காரணமா இருக்குறது வைரஸ் தான். ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு, பூச்சி மூலமாகத் தான் வைரஸ் பரவும். பப்பாளியில அந்த வேலையைச் செய்யுறது அசுவினி, வெள்ளை ஈ ரெண்டு பேரும் தான். இவங்களைக் கட்டுப்படுத்திட்டா பப்பாளியில வர்ற பெரும்பாலான நோயைத் தடுத்திடலாம். ஒட்டுப்பொறி மூலமா இவங்களைக் கட்டுப்படுத்தலாம்..பப்பாளி வளைய புள்ளி நோய் பச்சை இலையில நரம்பு போக மத்த இடங்கள் சுருங்கிப் போய் இருக்கும். கீழ் நோக்கி சுருண்டு இருக்கும். மஞ்சள் நிறத்துல தேமல் உருவாகி, கொப்புளம் மாதிரி வெடிச்சு இலை தலைகீழா தொங்கும். ஆரம்பகட்டத்துல இலையைத் தான் பாதிக்கும். போகப் போகப் பூ, பழங்களைப் பாதிக்கும். சில சமயங்கள்ல பழங்கள் உருவாகுறதைத் தடுக்கும். இந்த நோய் வராம தடுக்க நாற்று வாங்கும்போது கவனமா இருக்கணும். நோய் தாக்காத நாற்றா பார்த்து வாங்கணும்..தேமல் நோய் இலையில மஞ்சள் நிறத்துல சின்ன சின்னதா ஆரம்பிச்சு, இலை முழுக்க மஞ்சள் நிறமா மாறிடும். தேமல் நோய் தாக்குன மரத்துல பூ பூக்குறது, காய் காய்க்கிறது பாதிக்கப்படும்..இலை சுருண்டல்இந்த நோய் தாக்குன இலைகள் அதோட ஒரிஜினல் சைஸ் மாறி, இலை விளிம்புகள்ல சுருண்டு, கொத்தா தலைகீழா தொங்கும். பாதிக்கப்பட்ட செடிகளுக்குப் பூ, பழம் கொடுக்குற சக்தி இருக்காது. பாதிக்கப்பட்ட செடிகளை வேரோடு பிடுங்கி, குழி தோண்டி புதைச்சிடணும். வரப்புல மக்காச்சோளம், சோளம் பயிர் பண்ணிட்டு அதுக்குப் பிறகு பப்பாளி நடவு பண்ணுனா பெரும்பாலும் இதுமாதிரி நோய் தாக்காது. அக்கம் பக்கத்துலயோ, பப்பாளிக்கு ஊடுபயிராகவோ பூசணி மாதிரியான கொடி வகை பயிர் இருக்கக் கூடாது. தக்காளி செடி உள்ளே வரக் கூடாது. பொதுவா வைரஸ் தாக்குதலைச் சமாளிக்குற சக்தி வேப்ப மரத்துக்குத்தான் உண்டு. அதுனால தான் அம்மை தாக்குனதும் தலைக்கு வேப்பிலை வெச்சு படுக்குறோம். வேப்பிலை தண்ணியில குளிக்குறோம். பயிர்களுக்கும் அதுதான் வைத்தியம். வைரஸ் தாக்குன பயிர்கள்ல வேப்பங்கொட்டை+வெள்ளைப்பூண்டு கரைசல் தெளிச்சா ஓரளவு தீர்வு கிடைக்கும். வேப்பங்கொட்டை+வெள்ளைப்பூண்டு கரைசல் தயாரிக்க 5 கிலோ வேப்பங்கொட்டை, அரை கிலோ வெள்ளைப்பூண்டு ரெண்டையும் எடுத்து அம்மியில வெச்சு நல்லா அரைச்சுக்கணும். அதை ஒரு வெள்ளைத்துணியில கட்டி, 10 லிட்டர் நாட்டுமாட்டு கோமியத்துல ஒருநாள் முழுக்க ஊற வைக்கணும். பிறகு, அதை வடிகட்டி எடுத்து அதுல 100 கிராம் காதி சோப்பை கரைச்சு விடணும். இதுதான் வேப்பங்கொட்டை+வெள்ளைப்பூண்டு கரைசல். இதை 90 லிட்டர் தண்ணியில கலந்து தெளிக்கலாம்". தொடர்புக்கு : நீ. செல்வம் : 94435 38356.செம்மண் சரளையில் என்ன பயிர் செய்யலாம்?என்னோடது செம்மண் சரளை வகை நிலம். கிணற்று நீர் பாசனம். ஆனி மாசம் கொத்தமல்லி தழைக்காகப் பயிர் செய்யலாமா? வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, செடி அவரை, மிளகாய், செண்டுமல்லி போன்றவை பயிர் செய்யலாமா? இந்த மாதம் எவ்வகையான பயிர் செய்வது நல்ல பலன் தரும்? என்று கேட்டுள்ளார் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ். அவரது கேள்விக்கு விளக்கமளிக்கிறார் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ்,. ''நீங்க சொன்ன நிலத்துல, நீங்க சொன்ன பயிர்கள் எல்லாமே பயிரிடலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை. பொதுவா சரளை மணல் நிலத்துல தழைச்சத்து இருக்காது. மண்ணுல ஒட்டக்கூடிய தன்மை இருக்காது. எந்தப் பொருளைக் கொடுத்தாலும் ஒட்டணும். ஆனா, அந்த மண்ணுல ஒட்டுற மட்குப்பொருளோட அளவு ரொம்ப கம்மியா இருக்கும். உதாரணத்துக்குக் கொத்தமல்லியை தழைக்காகச் சாகுபடி பண்ணும்போது அங்க தழைச்சத்து அதிகமா இருக்கணும். மண்ணுல நீங்க கொடுக்குறதை பயிருக்கு எடுத்துக் கொடுக்கணும். .மணலுக்கு இடையில இருக்குற ஓட்டையோட அளவு பெருசா இருக்கும்போது தண்ணி கொடுத்தா, ஒரு மணி நேரத்துல தண்ணி படபடன்னு இறங்கி கீழே போயிடும். அதேமாதிரி நீங்க கொடுக்குற இடுபொருட்களையும் எடுத்துட்டு போயிடும். வேர் இருக்குறது மேல. இடுபொருட்கள் கீழே போயிடுச்சுன்னா நமக்குப் பிரயோஜனம் இல்லாம போயிடும். அதனால ஒரு தடவையாவது சணப்பு, தக்கைப்பூண்டு ரெண்டும் சேர்த்து 25 கிலோ வர்ற அளவுக்குத் தூவிவிடுங்க. அதை முறையா விவசாயமா பண்ணி, 55 நாள்ல மடக்கி உழுதுட்டு அதுக்கப்பறம் 10 நாள் விட்டு அடுத்த விவசாயத்தை ஆரம்பிங்க..அடுத்து, கையில போதுமான அளவு இடுபொருட்கள் வெச்சுக்கணும். இத்தனை பயிர் சொல்றீங்க. தேவையான மீன் அமிலம், இ.எம். கரைசல் ரெண்டும் கையில இருக்கணும். இ.எம். கரைசல் கொடுக்கக் கொடுக்க மண்ணு உடைஞ்சு கொடுத்து, தூளாகும். இதை ஒரு வருஷத்துல நீங்க உணர முடியும். ஈரம் நிக்குற அளவு நல்லாருக்கும். அதுக்குக் காரணம் இ.எம். கரைசல் தான். மாசம் ரெண்டு தடவை ஜீவாமிர்தம் கொடுக்கணும். உயிர் உரமான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் வேணும். பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா இதெல்லாம் கையில வச்சுக்கணும். ஒரு ஏக்கருக்கு, ஒரு மாசத்துக்கு 30 கிலோ சாம்பல் போடணும். அப்படி போட்டுட்டு பொட்டாஷ் சிமுலைசிங் பாக்டீரியா போட்டோம்னா சூப்பரா இருக்கும். பாஸ்போ பாக்டீரியா ஆரம்பகாலத்துல ஒரு லிட்டரும், பூக்க ஆரம்பிச்ச பிறகு 2 லிட்டரும் கொடுக்கணும். 15 நாளைக்கு ஒரு தடவை கொடுக்கணும்..நீங்க சொல்லியிருக்க பயிர்கள் எல்லாம் ஒரே அளவு தண்ணீர் தேவைப்படுற பயிர்கள்தான். அதுனால பிரச்சனையில்ல. வேலையாட்களைப் பொறுத்து எது கம்மியா போடலாம், எது கூட போடலாம்னு பார்த்து பண்ணுங்க. வேலியைச் சுத்தி 5 அடிக்கு ஒரு ஆமணக்கு நடுங்க. அது ரொம்ப முக்கியம். அதேமாதிரி வேலிகள்ல தட்டைப்பயிறு நடுறதும் ரொம்ப நல்லது. சூரிய ஒளியில இயங்கக்கூடிய விளக்குப்பொறி ஒன்னோ ரெண்டோ வாங்கி வைங்க. மஞ்சள் நிற ஒட்டும் அட்டை 20 எண்ணிக்கையில வாங்கி வைங்க. கட்டமைப்பைச் சரியா வச்சு செஞ்சீங்கன்னா நிச்சயம் முழுமையான வெற்றி கிடைக்கும். நாட்டு விதை வேணும்னா பெங்களூர்ல IIHR(Indian Institute of Horticulture Research - Bangalore) -ல நெட்ல போட்டு வாங்கிக்கங்க. இல்ல ஹைப்ரிட் ரகங்கள்னா பாக்கெட் விதையை வாங்கிடுங்க. எதுனாலும் நல்ல விதையா கேட்டு வாங்கிக்கங்க". தொடர்புக்கு : பிரிட்டோ ராஜ் : 99444 50552