பழனியில் களைகட்டிய தைப்பூசம்…அரோகர கோசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்..

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் கூடியதால் பழனி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூச விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
இந்நிலையில் பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
மேளதாளம், ஆட்டம்பாட்டத்துடனும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் இன்று 7ஆம் தேதி மாலையும் தேரோட்டம் நாளை 8ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக 300 சிறப்புப் பேருந்துகளும்,பாதுகாப்பு பணியில் 3,500காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு