இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் பல்வேறு மருத்துவ நன்மைகளும் உள்ளடங்கியுள்ளன என்பதுதான் வியக்கத்தக்க ஒன்றாகும். ஒரு சில மசாலாப் பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாகவே, இந்த மசாலாப் பொருட்கள் பிரியாணி மற்றும் ஸ்பைசியான உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும்.பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும்தான் பார்க்கின்றனர். ஆனால், அதனையும் தாண்டி இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளையும் பெறலாம். இப்படித்தான் நாம் உண்ணும் உணவு மருந்தாகவும் ஆகிறது. அதேநேரம் உபயோகப்படுத்தும் அளவு மிக முக்கியம். நன்மை அதிகம் உள்ளது என்பதால், அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், அதுவே செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவையைக்கூட ஏற்படுத்திவிடலாம்.பட்டை:இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்தப் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவு மட்டும் சுரக்க உதவும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவையும் சரியாகும்.கிராம்பு:இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தலாம். மேலும், அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ அல்லது ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பிரச்சனையை எளிதாக சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும் அருமருந்து எனலாம்.சீரகம்:பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும் மருத்துவக் குணத்தையும் கொண்ட உணவாகும்.கறுப்பு ஏலக்காய்:ஏலக்காய் ரகங்களில் கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் என இருவேறு ரகங்களும் உண்டு. பொதுவாக இந்தக் கறுப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில்தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்பசம் ஏற்படும். அந்தப் பிரச்சனையை, இந்த கறுப்பு ஏலக்காய் தீர்த்துவிடும். எனவேதான், அதிகப்படியான எண்ணெய் சேரும் உணவு வகைகளில் இந்த கறுப்பு ஏலக்காயைச் சேர்ப்பார்கள். மேலும், இந்தக் கறுப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கறுப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாரணம் தரும் மருந்தாகவும் பயன்படும்.குங்குமப்பூ:குங்குமப்பூ பொலிவான சரும அழகைத் தரும் என்பார்கள். இது பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றார் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை, மிக உயர்ந்தவை எனலாம். ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவும் மருத்துவக் குணத்தையும் கொண்டதாக விளங்குகிறது..ஜாதிக்காய்:இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள்தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும், இது பசியின்மையைப் போக்கும் ஒரு சிறந்த பொருளும்கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.மிளகு:அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.
இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் பல்வேறு மருத்துவ நன்மைகளும் உள்ளடங்கியுள்ளன என்பதுதான் வியக்கத்தக்க ஒன்றாகும். ஒரு சில மசாலாப் பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாகவே, இந்த மசாலாப் பொருட்கள் பிரியாணி மற்றும் ஸ்பைசியான உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும்.பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும்தான் பார்க்கின்றனர். ஆனால், அதனையும் தாண்டி இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளையும் பெறலாம். இப்படித்தான் நாம் உண்ணும் உணவு மருந்தாகவும் ஆகிறது. அதேநேரம் உபயோகப்படுத்தும் அளவு மிக முக்கியம். நன்மை அதிகம் உள்ளது என்பதால், அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், அதுவே செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவையைக்கூட ஏற்படுத்திவிடலாம்.பட்டை:இந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்தப் பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவு மட்டும் சுரக்க உதவும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவையும் சரியாகும்.கிராம்பு:இந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பதோடு, பல் பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தலாம். மேலும், அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ அல்லது ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பிரச்சனையை எளிதாக சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும் அருமருந்து எனலாம்.சீரகம்:பெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும் மருத்துவக் குணத்தையும் கொண்ட உணவாகும்.கறுப்பு ஏலக்காய்:ஏலக்காய் ரகங்களில் கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் என இருவேறு ரகங்களும் உண்டு. பொதுவாக இந்தக் கறுப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில்தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்பசம் ஏற்படும். அந்தப் பிரச்சனையை, இந்த கறுப்பு ஏலக்காய் தீர்த்துவிடும். எனவேதான், அதிகப்படியான எண்ணெய் சேரும் உணவு வகைகளில் இந்த கறுப்பு ஏலக்காயைச் சேர்ப்பார்கள். மேலும், இந்தக் கறுப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கறுப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாரணம் தரும் மருந்தாகவும் பயன்படும்.குங்குமப்பூ:குங்குமப்பூ பொலிவான சரும அழகைத் தரும் என்பார்கள். இது பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றார் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை, மிக உயர்ந்தவை எனலாம். ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவும் மருத்துவக் குணத்தையும் கொண்டதாக விளங்குகிறது..ஜாதிக்காய்:இதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள்தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும், இது பசியின்மையைப் போக்கும் ஒரு சிறந்த பொருளும்கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.மிளகு:அனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும். இத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.