திருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரம் பலவிதங்களில் மனிதர்களின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்களை உள்ளடக்கி உள்ளது. ஆன்மிகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும் திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.திருவாச்சி அல்லது மந்தாரை என அழைக்கப்பெறும் இம்மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்டது. இது, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது.வயிற்றை சீராக்கும் செரிமானத்தைத் தூண்டும்சுத்தம் செய்யப்பட திருவாச்சி இலைகளை அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றுடன் நன்கு இடித்த சிறிதளவு இஞ்சியை சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டை கலந்து, முன்னூறு மி.லி தண்ணீரில் சுட வைத்து, சுண்டியபின் இறக்கி ஆற வைக்கவும்.இந்தக் குடிநீரை தினமும் இருவேளை பருகி வர, காரமான உணவுகள், நேரந்தவறிய உணவுகளால் ஏற்பட்ட வயிற்றுப் புண்கள் யாவும், தீரும். மேலும், வயிற்றுப் புண் வராமலும் காக்கும், உணவு செரிமானத்தை தூண்டி, வயிற்றை சீராக்கும். மேலும், வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை மிக்கது, ஜுரம், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.குடல் வியாதிகள் விலகும்மந்தாரை இலைகள் என அழைக்கப்படும் திருவாச்சி இலைகளில் உணவை உண்டு வர, பசியின்மை பாதிப்பை போக்கும், பல வகை உடல் பாதிப்புகள் விலகும். ஈர்க்குச்சிகளால் இணைக்கப்பட்ட மந்தாரை இலைகளில் சோறு போட்டு, அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து, திருவாச்சி துவையலுடன் சாப்பிட்டு வர, அனைத்து வகையான குடல் வியாதிகள் விரைவில் விலகும்.உடல் வீக்கம் குறையஉடலில்ஏற்படும்வீக்கம்போக்கதிருவாச்சிஇலைகளின்மேல்விளக்கெண்ணைதடவி, பின்அவற்றைசூடானதணலில்வாட்டி, அடிபட்டகாயம், அடிபட்டவீக்கங்கள்இவற்றின்மேல்வைத்துகட்டிவர, இரண்டுமூன்று.மணி நேரங்களில் அடிபட்ட இடங்களில் உள்ள வீக்கங்கள் குறைந்து, தசைகளில் உள்ள காயங்களில் ஏற்பட்ட வலி நீங்கும்.சரும வியாதிகளைப் போக்கும்அண்மைக் காலங்களில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைகள் விதிப்பதன் காரணமாக, சில சுற்றுலா மையங்களில், உணவைக் கட்டிக் கொடுப்பதில், மந்தாரை இலைகள் அதிக அளவில் பயன்படுகிறது. இந்த இலைகளின் மருத்துவக் குணம், சரும வியாதிகளைப் போக்கவும், சுவாச பாதிப்புகளால் ஏற்படும் தொண்டை வலி போன்ற கோளாறுகளையும் சரிசெய்பவை.பெண்களுக்கு கருப்பையை வளமாக்கசிறிது திருவாச்சி மலர்களை முன்னூறு மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து, சுண்டியபின் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர, சீரற்ற மாதவிலக்கு சீராகும், கருப்பை வளமாகும். அதோடு சளியையும் வெளியேற்றும், கைகால் மூட்டு வலிகளையும் குணமாக்கும்.கண்கள் குளிர்ச்சி பெறஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் சிறிது ஊற்றி, அதில் திருவாச்சி மலர்களை இட்டு, நன்கு காய்ச்சி ஆறியபின், உறங்கப் போகும் வேளையில், கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை ஒட்டி இருந்த கருவளையம் நீங்கி விடும். கண்களின் சிவந்த நிறம் மாறி, கண்களின் வெம்மை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.தைராய்டு பாதிப்புக்குபெரும்பான்மை பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளைப் போக்கும் ஆற்றல் மிக்கது, திருவாச்சி மலரின் மொட்டுக்கள். இவை பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரும்பாதிப்புகள் ஏற்படுத்தும் தைராய்டு கோளாறுகளை சரிசெய்யும். அதோடு, திருவாச்சி வேரை நீரில் கொதிக்க வைத்து, நன்கு சுண்டியதும் தினமும் பருகி வந்தால், உடல் பருமன் வெகுவாகக் குறையும்.ஆன்மிகத்தில் மந்தாரைதிருக்கோயில்களில் தல மரமாக விளங்கும் மந்தாரை மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோயில்களில் அகல்களில் விளக்கேற்றும்போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விசேஷமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்..அந்தவகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், மந்தாரை இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மிக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.சித்த மருத்துவத்தில்உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மி.லி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும்.இரத்தப் போக்கை நிறுத்தும் உடலை வலுவாக்கும்செவ்வண்ண நிறங்களில் காணப்படும் சில வகை திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, உள்ளங்கை அளவு அந்தப் பொடியை எடுத்து, அதில் பனங் கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும்.திருவாச்சி மரப்பட்டையை பொடியாக்கி, நீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவாக நீர் சுண்டியதும், பருகி வர, உணவு செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும்.மேலும், தசையை வலுவாக்கி, இரத்தப் போக்கை நிறுத்தி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து தேற்றி, உடலை வலுவாக்கும், இயல்பு மிக்கது. உடல் வியாதிகள் போக்கும் திருவாச்சி இலை துவையல்.தேவையான பொருட்கள்:நன்கு அலசிய திருவாச்சி இலைகள் ஒரு கைப்பிடி அளவு, புளி சிறிதளவு, சிறிய வெங்காயம் நான்கு, பச்சை மிளகாய் நான்கு மற்றும் இந்துப்புசெய்முறை:நன்கு அலசிய திருவாச்சி இலைகளை வாணலியில் இட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் இட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு, வதக்கிய திருவாச்சி இலைகள், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் இந்துப்பை சேர்த்து, சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து அரைத்து எடுக்க, கறிவேப்பிலை போன்ற நறுமணத்துடன் அற்புதச் சுவைமிக்க திருவாச்சி துவையல் கிடைக்கும்.இதை உணவுடன் தொட்டு சாப்பிட ஏற்றதாக அமையும். அனைத்துவகை உணவுக்கும் சிறப்பான இணையாக இருக்கும் திருவாச்சி துவையல். தயிர் சாதத்துடன் கலந்து உண்ண கூடுதல் சிறப்புமிக்க இணையாக அமையும். சுவைமிக்க இந்தத் துவையலை, அம்மியில் அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மிக்சியில் அரைக்கலாம், கூடுதல் சுவை தேவைப்படுபவர்கள் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். உடல் வியாதிகள் போக்கி, உடலுக்கு மிக்க வலு சேர்க்கும் திருவாச்சி துவையலை, அனைத்து வயதினரும் சாப்பிட்டு வர, உடல் நலமாகும்.-பொ.பாலாஜிகணேஷ்
திருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரம் பலவிதங்களில் மனிதர்களின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்களை உள்ளடக்கி உள்ளது. ஆன்மிகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும் திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.திருவாச்சி அல்லது மந்தாரை என அழைக்கப்பெறும் இம்மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்டது. இது, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது.வயிற்றை சீராக்கும் செரிமானத்தைத் தூண்டும்சுத்தம் செய்யப்பட திருவாச்சி இலைகளை அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றுடன் நன்கு இடித்த சிறிதளவு இஞ்சியை சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டை கலந்து, முன்னூறு மி.லி தண்ணீரில் சுட வைத்து, சுண்டியபின் இறக்கி ஆற வைக்கவும்.இந்தக் குடிநீரை தினமும் இருவேளை பருகி வர, காரமான உணவுகள், நேரந்தவறிய உணவுகளால் ஏற்பட்ட வயிற்றுப் புண்கள் யாவும், தீரும். மேலும், வயிற்றுப் புண் வராமலும் காக்கும், உணவு செரிமானத்தை தூண்டி, வயிற்றை சீராக்கும். மேலும், வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை மிக்கது, ஜுரம், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.குடல் வியாதிகள் விலகும்மந்தாரை இலைகள் என அழைக்கப்படும் திருவாச்சி இலைகளில் உணவை உண்டு வர, பசியின்மை பாதிப்பை போக்கும், பல வகை உடல் பாதிப்புகள் விலகும். ஈர்க்குச்சிகளால் இணைக்கப்பட்ட மந்தாரை இலைகளில் சோறு போட்டு, அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து, திருவாச்சி துவையலுடன் சாப்பிட்டு வர, அனைத்து வகையான குடல் வியாதிகள் விரைவில் விலகும்.உடல் வீக்கம் குறையஉடலில்ஏற்படும்வீக்கம்போக்கதிருவாச்சிஇலைகளின்மேல்விளக்கெண்ணைதடவி, பின்அவற்றைசூடானதணலில்வாட்டி, அடிபட்டகாயம், அடிபட்டவீக்கங்கள்இவற்றின்மேல்வைத்துகட்டிவர, இரண்டுமூன்று.மணி நேரங்களில் அடிபட்ட இடங்களில் உள்ள வீக்கங்கள் குறைந்து, தசைகளில் உள்ள காயங்களில் ஏற்பட்ட வலி நீங்கும்.சரும வியாதிகளைப் போக்கும்அண்மைக் காலங்களில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைகள் விதிப்பதன் காரணமாக, சில சுற்றுலா மையங்களில், உணவைக் கட்டிக் கொடுப்பதில், மந்தாரை இலைகள் அதிக அளவில் பயன்படுகிறது. இந்த இலைகளின் மருத்துவக் குணம், சரும வியாதிகளைப் போக்கவும், சுவாச பாதிப்புகளால் ஏற்படும் தொண்டை வலி போன்ற கோளாறுகளையும் சரிசெய்பவை.பெண்களுக்கு கருப்பையை வளமாக்கசிறிது திருவாச்சி மலர்களை முன்னூறு மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து, சுண்டியபின் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர, சீரற்ற மாதவிலக்கு சீராகும், கருப்பை வளமாகும். அதோடு சளியையும் வெளியேற்றும், கைகால் மூட்டு வலிகளையும் குணமாக்கும்.கண்கள் குளிர்ச்சி பெறஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் சிறிது ஊற்றி, அதில் திருவாச்சி மலர்களை இட்டு, நன்கு காய்ச்சி ஆறியபின், உறங்கப் போகும் வேளையில், கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை ஒட்டி இருந்த கருவளையம் நீங்கி விடும். கண்களின் சிவந்த நிறம் மாறி, கண்களின் வெம்மை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.தைராய்டு பாதிப்புக்குபெரும்பான்மை பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளைப் போக்கும் ஆற்றல் மிக்கது, திருவாச்சி மலரின் மொட்டுக்கள். இவை பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரும்பாதிப்புகள் ஏற்படுத்தும் தைராய்டு கோளாறுகளை சரிசெய்யும். அதோடு, திருவாச்சி வேரை நீரில் கொதிக்க வைத்து, நன்கு சுண்டியதும் தினமும் பருகி வந்தால், உடல் பருமன் வெகுவாகக் குறையும்.ஆன்மிகத்தில் மந்தாரைதிருக்கோயில்களில் தல மரமாக விளங்கும் மந்தாரை மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோயில்களில் அகல்களில் விளக்கேற்றும்போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விசேஷமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்..அந்தவகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், மந்தாரை இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மிக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.சித்த மருத்துவத்தில்உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மி.லி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும்.இரத்தப் போக்கை நிறுத்தும் உடலை வலுவாக்கும்செவ்வண்ண நிறங்களில் காணப்படும் சில வகை திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, உள்ளங்கை அளவு அந்தப் பொடியை எடுத்து, அதில் பனங் கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும்.திருவாச்சி மரப்பட்டையை பொடியாக்கி, நீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவாக நீர் சுண்டியதும், பருகி வர, உணவு செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும்.மேலும், தசையை வலுவாக்கி, இரத்தப் போக்கை நிறுத்தி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து தேற்றி, உடலை வலுவாக்கும், இயல்பு மிக்கது. உடல் வியாதிகள் போக்கும் திருவாச்சி இலை துவையல்.தேவையான பொருட்கள்:நன்கு அலசிய திருவாச்சி இலைகள் ஒரு கைப்பிடி அளவு, புளி சிறிதளவு, சிறிய வெங்காயம் நான்கு, பச்சை மிளகாய் நான்கு மற்றும் இந்துப்புசெய்முறை:நன்கு அலசிய திருவாச்சி இலைகளை வாணலியில் இட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் இட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு, வதக்கிய திருவாச்சி இலைகள், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் இந்துப்பை சேர்த்து, சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து அரைத்து எடுக்க, கறிவேப்பிலை போன்ற நறுமணத்துடன் அற்புதச் சுவைமிக்க திருவாச்சி துவையல் கிடைக்கும்.இதை உணவுடன் தொட்டு சாப்பிட ஏற்றதாக அமையும். அனைத்துவகை உணவுக்கும் சிறப்பான இணையாக இருக்கும் திருவாச்சி துவையல். தயிர் சாதத்துடன் கலந்து உண்ண கூடுதல் சிறப்புமிக்க இணையாக அமையும். சுவைமிக்க இந்தத் துவையலை, அம்மியில் அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மிக்சியில் அரைக்கலாம், கூடுதல் சுவை தேவைப்படுபவர்கள் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். உடல் வியாதிகள் போக்கி, உடலுக்கு மிக்க வலு சேர்க்கும் திருவாச்சி துவையலை, அனைத்து வயதினரும் சாப்பிட்டு வர, உடல் நலமாகும்.-பொ.பாலாஜிகணேஷ்