-பா.கண்ணன் சௌபக என்ற சொல்லுக்கு அதிர்ஷ்டம், செல்வம் என்பது பொருள். இதிலிருந்து வந்த வார்த்தையான சௌபாக்யம் சிறந்த செல்வம், சாதகம், சுப அறிகுறி என்பதைக் குறிக்கும். இப்படிப்பட்ட சௌபாக்யத்தை, மங்கல வாழ்வை அருளும் மகாலட்சுமியைப் போற்றித் துதிக்க ஓர் அருமையான அஷ்டகம் உள்ளது. .வியாழபகவானை அலட்சியப்படுத்தியதாலும், துர்வாசரை சீண்டிய சாபத்தாலும் செல்வம் யாவும் இழந்த இந்திரன், தன் தவறை உணர்ந்து இந்த எட்டு சுலோகங்களைச் சொல்லி திருமகளைத் தியானித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாகப் புராணக் கதை பத்மபுராணத்தில் உண்டு. இதனைச் சொல்வோர் இல்லத்தில் சகலசௌபாக்யமும் ஐஸ்வர்யமும் சேரும் என்பது பெரியோர் வாக்கு. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதேசங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)மகாமாயையும் ஸ்ரீபீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரிசர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (2)கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்குப் பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரிசர்வ துக்க ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (3)அனைத்தையும் அறிந்தவளும், எல்லாருக்கும் விரும்பிய வரங்களைத் தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி பிரதாயினிமந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (4)சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரியோகஜே யோக சம்பூதே மஹாலஷ்மி நமோஸ்துதே (5)தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரேமகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (6)கண்களுக்குத் தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.பத்மாஸன ஸ்திதே தேவி பரபிரம்ம ஸ்வரூபிணிபரமேஸி ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே (7)பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம்பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதேஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே (8) வெண்ணிற ஆடை தரித்தவளும், பலவித அலங்காரங்களால் சிங்காரிக்கப்பட்டவளும், உலகம் முழுதும் பரவியிருப்பவளும், உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்..இதன் பலன் :மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமந் நர:ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதாமகாலக்ஷ்மி தேவியே உன்னைப் போற்றும் இந்த எட்டுத் துதிகளையும் மனப்பூர்வமாக தினமும் சொல்பவர் யாவும் வெல்பவராகவும் ராஜ்யங்களை அடைந்தவராகவும் இருப்பார்கள்.ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம்த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித:ஒரு நாளில் ஒருமுறை இத்துதியைச் சொன்னால் சகல பாவங்களும் நீங்கும்.இருமுறை சொல்வோர் இல்லத்தில் தனதான்யங்கள் சேரும்.த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம்மஹாலக்ஷ்மி பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபாமூன்று முறை சொல்வோர் உன் அருளை முழுமையாகப் பெற்றுத் தன் எதிரிகளை வெல்வர். அந்த இடத்தில் அன்னையே நிலைத்து நிற்பார்.……………….
-பா.கண்ணன் சௌபக என்ற சொல்லுக்கு அதிர்ஷ்டம், செல்வம் என்பது பொருள். இதிலிருந்து வந்த வார்த்தையான சௌபாக்யம் சிறந்த செல்வம், சாதகம், சுப அறிகுறி என்பதைக் குறிக்கும். இப்படிப்பட்ட சௌபாக்யத்தை, மங்கல வாழ்வை அருளும் மகாலட்சுமியைப் போற்றித் துதிக்க ஓர் அருமையான அஷ்டகம் உள்ளது. .வியாழபகவானை அலட்சியப்படுத்தியதாலும், துர்வாசரை சீண்டிய சாபத்தாலும் செல்வம் யாவும் இழந்த இந்திரன், தன் தவறை உணர்ந்து இந்த எட்டு சுலோகங்களைச் சொல்லி திருமகளைத் தியானித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாகப் புராணக் கதை பத்மபுராணத்தில் உண்டு. இதனைச் சொல்வோர் இல்லத்தில் சகலசௌபாக்யமும் ஐஸ்வர்யமும் சேரும் என்பது பெரியோர் வாக்கு. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதேசங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)மகாமாயையும் ஸ்ரீபீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரிசர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (2)கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்குப் பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரிசர்வ துக்க ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (3)அனைத்தையும் அறிந்தவளும், எல்லாருக்கும் விரும்பிய வரங்களைத் தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும், அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு நமஸ்காரம்.சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி பிரதாயினிமந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (4)சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரியோகஜே யோக சம்பூதே மஹாலஷ்மி நமோஸ்துதே (5)தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரேமகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே (6)கண்களுக்குத் தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.பத்மாஸன ஸ்திதே தேவி பரபிரம்ம ஸ்வரூபிணிபரமேஸி ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே (7)பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம்பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதேஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே (8) வெண்ணிற ஆடை தரித்தவளும், பலவித அலங்காரங்களால் சிங்காரிக்கப்பட்டவளும், உலகம் முழுதும் பரவியிருப்பவளும், உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்..இதன் பலன் :மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமந் நர:ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதாமகாலக்ஷ்மி தேவியே உன்னைப் போற்றும் இந்த எட்டுத் துதிகளையும் மனப்பூர்வமாக தினமும் சொல்பவர் யாவும் வெல்பவராகவும் ராஜ்யங்களை அடைந்தவராகவும் இருப்பார்கள்.ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம்த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித:ஒரு நாளில் ஒருமுறை இத்துதியைச் சொன்னால் சகல பாவங்களும் நீங்கும்.இருமுறை சொல்வோர் இல்லத்தில் தனதான்யங்கள் சேரும்.த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம்மஹாலக்ஷ்மி பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபாமூன்று முறை சொல்வோர் உன் அருளை முழுமையாகப் பெற்றுத் தன் எதிரிகளை வெல்வர். அந்த இடத்தில் அன்னையே நிலைத்து நிற்பார்.……………….