-தேனம்மை லெக்ஷ்மணன்காடுகளையும் கழனிகளையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வங்கள்தான் அய்யனாரும், கருப்பரும். இவை பல்வேறு இனத்தாருக்கு குலதெய்வமாகவும் விளங்குகின்றன. கம்மாய்க் கரையோரம் அமைந்த இவ்வகைக் கோவில்கள் சிவகங்கைப் பகுதியில் அதிகம்..அவற்றில் ஒன்று நரியங்குடியில் உள்ள பூரண புஷ்கலை சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார், காட்டுக்கருப்பர் கோவில். இதற்கு சிவகங்கை மன்னர்கள் அளித்த மானிய நிலம்கூட உண்டு. சிவகங்கை மன்னர்கள் இப்பகுதிக்கு நரி வேட்டையாட வந்தபோது இங்குள்ள மக்கள் அவர்களை அன்புடன் உபசரித்தனர். அதனால் மகிழ்ந்த மன்னர்கள் இக்கிராமத்தை ஊர்மக்களுக்கே பரிசாக அளித்துவிட்டார்களாம்.இவ்வூருக்கு சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் உண்டாம். ஆதினம் அழகிய அய்யனார், அழகிய அய்யனாரைக் கொண்ட ஆதினம் அல்லது ஆதினம் இளகிய அய்யனார் என்பதுதான் மருவி ஆதினமிளகி அய்யனார் ஆகிவிட்டார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.நரியங்குடியைச் சுற்றியுள்ள கட்டுக்கண்பட்டி, அப்பாடிப்பட்டி, ஊடகம் பட்டி, பிராமணப்பட்டி, வேளாண்பட்டி, சாமுத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு இந்த அய்யனார்தான் குலதெய்வம். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 108 குடும்பங்கள் இவரை குலதெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.இங்கேகருப்பருக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைபுரவிஎடுப்பும்,அய்யனாருக்காகசிவராத்திரியும் விமர்சையாகக் கொண்டாடப்படுவதுவிசேஷம். அவர்களைக்குலதெய்வமாகக்கொண்டவர்கள்வெவ்வேறுஊர்களில்இருந்தாலும்விழா நாட்களில் இங்கு வந்துவிடுவார்கள். இக்கோவிலின்திருப்பணிகள்மற்றும்புரவிஎடுப்புஆகியவற்றுக்குநகரத்தார்கள்பெரும்பங்களிப்புச்செய்துள்ளார்கள். இங்குவிடுதியும்சமையல்கூடமும்உள்ளது..அதைச் சவுக்கை என்கிறார்கள். தற்போது அது சமுதாயக்கூடமாகவும் செயல்படுகிறது. 1934, 1996, 2009 மற்றும் 2022, ஆகஸ்ட் 31 அன்று இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்தின் முன் சேமக் குதிரை ஓங்கி உயர்ந்து காட்சியளிக்கிறது. அதில் பக்கவாட்டில் சுதைச் சிற்பமாக விநாயகரும் முருகனும், முன்புறம் அரிவாளோடு கருப்பரும் காட்சியளிக்கிறார்கள். சேமக்குதிரையின் பின் பக்கம் மதிலை ஒட்டி ஒன்பது அரிவாள்கள் பதிக்கப்பட்டுள்ளன. பார்த்தவுடன் சிலிர்க்கிறது.உள்ளே நுழைந்தால் அதைவிட அதிகமாகப் புல்லரிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக எடுத்து வரப்பட்ட புரவிகள் தெற்குப் பக்கத்திலும், வடக்குச் சுவரில் சாய்ந்து பத்துப் பூதங்களும் பிரமாண்டமாகக் காட்சி கொடுக்கிறார்கள். இடப்புறம் முன்னோடி கருப்பர் காட்சி அளிக்கிறார்.இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கிய இருநிலைக் கர்ப்பக்கிரகத்தில் ஆதினமிளகி ஐயனாரும், வடக்கு நோக்கிக் காட்டுக்கருப்பரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலும் திருச்சுற்றும் புராதனக்கல் திருப்பணிகள். இராஜகோபுரத்தின் மேல்பக்கம் நிலைகளுக்குப் பக்கவாட்டில் துவாரபாலகர்கள் கதாயுதத்தோடு சிங்கத்தின் மேல் கால் வைத்தபடி நிற்கிறார்கள். பக்கவாட்டில் பைரவர், பிள்ளையார், முருகன், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரன், நீலவண்ணக் கண்ணன் மற்றும் உக்கிர தெய்வங்கள் காட்சி அளிக்கிறார்கள்.வடக்கு நோக்கிய குதிரை வீரன், கருப்பர் வாயில் காட்டுக் கருப்பர் சந்நதிக்கானது. இக்கோபுரத்தின் மேல் மிரட்டும் விழிகள், கொடுவாள் மீசை, அரிவாளோடு கருப்பர் உக்கிரக்காட்சி அளிக்கிறார். உள்ளே சிறு கோபுரங்கள் கொண்ட தனிச் சந்நதிகளில் பிள்ளையார், வள்ளி, தெய்வானை சமேத முருகன் மற்றும் பைரவர் அருள்பாலிக்கிறார்கள்..ஆலயத்தின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கிய கோஷ்ட தெய்வங்களாக காட்டுக்கருப்பருக்கு வலப்பக்கம் நொண்டிக்கருப்பர், காளியம்மன், பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் ஆகியோர் ஒரு சன்னதியிலும், காட்டுக்கருப்பருக்கு இடப்பக்கம் இன்னொரு சந்நதியில் சின்னக் கருப்பர், வீரபத்திரர், சப்தகன்னியர், அரசமுகம், சன்னியாசி ஆகியோரும் காட்சி அளிக்கிறார்கள்.அய்யனார் சந்நதிக்கு எதிரே அவரது வாகனமான யானையும், அதன்பின் பலிபீடமும் உள்ளது. பக்கவாட்டில் இரு யானைகளும், அய்யனார் சந்நதியின் இருபுறம் புடைப்புச் சிற்பமாக துவாரபாலகர்களும் காட்சி அளிக்கிறார்கள். கருப்பர் சந்நதியின் முன்னும் சுதையால் ஆன யானைகளும் புரவி எடுப்பில் கொண்டு வந்து வைக்கப்பட்ட அரிவாளும் கதையும் ஏந்திய கருப்பர் சிலைகளும் காட்சியளிக்கின்றன. அய்யனார் சந்நதியின் பக்கவாட்டில் ஒன்பது மணிகள் கட்டப்பட்டுள்ளன. பூஜை நேரத்தில் அவை ஓங்கி ஒலிப்பது நமக்குள் சன்னதம் பெருக்கும். முன்னோடி என்ற தெய்வத்துக்குப் பக்கவாட்டில் மடைப்பள்ளி உள்ளது..நெற்கழனிகளைக் காக்கும் அய்யனாருக்குப் பிரியமான விஷயம் அன்னதானம் செய்வது. ஆகையால் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கும் அனைவரும் வருடாவருடம் நரியங்குடிக்கு வந்து மகேஸ்வர பூஜை நடத்தி அன்னதானம் செய்கிறார்கள்.இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புரவி எடுப்பு விழா நரியங்குடியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது காடு கழனி செழிக்க மழை வேண்டி நிகழ்த்தப்படுகின்றது. இதில் முதல்நாள் இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும் அத்துடன் பத்துப் பசுக்களும் ஒரு காளையும் கொம்பு, கொட்டு, சுருட்டி, எக்காளம் ஒலிக்கக் சுமந்து வரப்பட்டு மந்தையில் வைக்கப்படுகின்றன..மறுநாள் கொடி, குடை, ஆலவட்டம் சூழ கருப்பருடன் இவை அனைத்தும் மேளதாளம், வாணவேடிக்கையோடு ஊர்வலமாக ஊரைச் சுற்றி வந்து கோவிலில் சேர்க்கப்படுகின்றன. அங்கே அய்யனார், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வண்ண மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகின்றது.இந்த ஊர்வலத்தில் ஊர்மக்கள் புரவிகள், பூதங்கள், கருப்பருக்குச் சிறப்புச் செய்கின்றார்கள். திருமண வேண்டுதல் செய்து கொண்ட இளைஞர்கள் பசுக்கள், காளைகள் உருவாரத்தை தங்கள் தலைமேல் வைத்துச் சுமந்து வந்து கோவிலில் சேர்க்கின்றார்கள்.இப்புரவி எடுப்பு நான்கு நிகழ்வுகளாக நடைபெறும். புரவி எடுப்பு சம்பந்தமாக நாள் குறிப்பதை நாள் கொட்டுதல் என்பார்கள். அதற்கடுத்து புரவி செய்ய வேளாரிடம் அல்லது குயவரிடம் பிடிமண் எடுத்துக் கொடுப்பதை சேங்கை வெட்டுதல் என்பார்கள். அடுத்து புரவி வனைவதை உருவாரம் எடுத்தல் என்பார்கள். முடிவில் குறித்த நாளில் புரவிகள், பூதங்கள் சூழ கருப்பரைக் கோவிலில் கொண்டு வருவதை புரவி எடுத்தல் என்பார்கள். கோவிலைச் சுற்றி தீர்த்தப்பூரணி ஐயர் ஊரணியும், முனி ஐயா தோப்பு ஊரணியும் உள்ளது.வைகாசியில் கருப்பருக்குப் புரவி எடுப்பு என்றால், மாசியில் அய்யனாருக்கு சிவராத்திரி சிறப்பு. அன்று இக்கோவிலை குலதெய்வமாகக் கொண்டவர்களும், சுற்றியுள்ள ஊர்க்காரர்களும் வண்டி கட்டிக்கொண்டு இங்கே வந்து சமைத்துண்டு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். சிவ ராத்திரிக்கு அடுத்த நாள் பாரி வேட்டை. கோவிலை அடுத்துள்ள கம்மாய்க்கு அருகிலுள்ள பெரிய புளியமரத்தின் அருகில் பாரி வேட்டைக்கான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெறும்.நரியங்குடியில் உள்ள உகந்தம் என்னும் குளத்துக்கு இராமாயணத்தோடு தொடர்பு உண்டு என்கிறார்கள். இங்கே மிதிலைக் கண்மாய் என்ற ஒன்றும் இருக்கிறது.முழுக்க முழுக்க ஊராரின் பொறுப்பிலேயே கோவில் இருக்கிறது. கருப்பர், அய்யனார் பேரில் சிந்து, விருத்தம், அழைப்பு, கொலு முதலிய பாக்கள் யாக்கப்பட்டுள்ளன. மணப்பேறு, மகப்பேறுக்காகவும், இழந்த சொத்துகளை மீட்கவும், திருடுபோன பொருட்கள் திரும்பக் கிடைக்கவும், ஆபத்துகளில் இருந்து காக்கவும் நரியங்குடி அய்யனாரையும் காட்டுக்கருப்பரையும் வழிபட்டு பலர் பலனடைந்துள்ளனர்..எங்கே இருக்கு?சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வந்து அங்கிருந்து பட்டமங்கலம் வரவேண்டும். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் நரியங்குடியில் கோவில் உள்ளது.தரிசன நேரம்காலை 8 - மதியம் 12. விழா நாட்களில் காலையிலிருந்து மாலை வரை திறந்திருக்கும்.
-தேனம்மை லெக்ஷ்மணன்காடுகளையும் கழனிகளையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வங்கள்தான் அய்யனாரும், கருப்பரும். இவை பல்வேறு இனத்தாருக்கு குலதெய்வமாகவும் விளங்குகின்றன. கம்மாய்க் கரையோரம் அமைந்த இவ்வகைக் கோவில்கள் சிவகங்கைப் பகுதியில் அதிகம்..அவற்றில் ஒன்று நரியங்குடியில் உள்ள பூரண புஷ்கலை சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார், காட்டுக்கருப்பர் கோவில். இதற்கு சிவகங்கை மன்னர்கள் அளித்த மானிய நிலம்கூட உண்டு. சிவகங்கை மன்னர்கள் இப்பகுதிக்கு நரி வேட்டையாட வந்தபோது இங்குள்ள மக்கள் அவர்களை அன்புடன் உபசரித்தனர். அதனால் மகிழ்ந்த மன்னர்கள் இக்கிராமத்தை ஊர்மக்களுக்கே பரிசாக அளித்துவிட்டார்களாம்.இவ்வூருக்கு சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் உண்டாம். ஆதினம் அழகிய அய்யனார், அழகிய அய்யனாரைக் கொண்ட ஆதினம் அல்லது ஆதினம் இளகிய அய்யனார் என்பதுதான் மருவி ஆதினமிளகி அய்யனார் ஆகிவிட்டார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.நரியங்குடியைச் சுற்றியுள்ள கட்டுக்கண்பட்டி, அப்பாடிப்பட்டி, ஊடகம் பட்டி, பிராமணப்பட்டி, வேளாண்பட்டி, சாமுத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு இந்த அய்யனார்தான் குலதெய்வம். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 108 குடும்பங்கள் இவரை குலதெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.இங்கேகருப்பருக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைபுரவிஎடுப்பும்,அய்யனாருக்காகசிவராத்திரியும் விமர்சையாகக் கொண்டாடப்படுவதுவிசேஷம். அவர்களைக்குலதெய்வமாகக்கொண்டவர்கள்வெவ்வேறுஊர்களில்இருந்தாலும்விழா நாட்களில் இங்கு வந்துவிடுவார்கள். இக்கோவிலின்திருப்பணிகள்மற்றும்புரவிஎடுப்புஆகியவற்றுக்குநகரத்தார்கள்பெரும்பங்களிப்புச்செய்துள்ளார்கள். இங்குவிடுதியும்சமையல்கூடமும்உள்ளது..அதைச் சவுக்கை என்கிறார்கள். தற்போது அது சமுதாயக்கூடமாகவும் செயல்படுகிறது. 1934, 1996, 2009 மற்றும் 2022, ஆகஸ்ட் 31 அன்று இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்தின் முன் சேமக் குதிரை ஓங்கி உயர்ந்து காட்சியளிக்கிறது. அதில் பக்கவாட்டில் சுதைச் சிற்பமாக விநாயகரும் முருகனும், முன்புறம் அரிவாளோடு கருப்பரும் காட்சியளிக்கிறார்கள். சேமக்குதிரையின் பின் பக்கம் மதிலை ஒட்டி ஒன்பது அரிவாள்கள் பதிக்கப்பட்டுள்ளன. பார்த்தவுடன் சிலிர்க்கிறது.உள்ளே நுழைந்தால் அதைவிட அதிகமாகப் புல்லரிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக எடுத்து வரப்பட்ட புரவிகள் தெற்குப் பக்கத்திலும், வடக்குச் சுவரில் சாய்ந்து பத்துப் பூதங்களும் பிரமாண்டமாகக் காட்சி கொடுக்கிறார்கள். இடப்புறம் முன்னோடி கருப்பர் காட்சி அளிக்கிறார்.இந்தக் கோவிலில் கிழக்கு நோக்கிய இருநிலைக் கர்ப்பக்கிரகத்தில் ஆதினமிளகி ஐயனாரும், வடக்கு நோக்கிக் காட்டுக்கருப்பரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலும் திருச்சுற்றும் புராதனக்கல் திருப்பணிகள். இராஜகோபுரத்தின் மேல்பக்கம் நிலைகளுக்குப் பக்கவாட்டில் துவாரபாலகர்கள் கதாயுதத்தோடு சிங்கத்தின் மேல் கால் வைத்தபடி நிற்கிறார்கள். பக்கவாட்டில் பைரவர், பிள்ளையார், முருகன், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரன், நீலவண்ணக் கண்ணன் மற்றும் உக்கிர தெய்வங்கள் காட்சி அளிக்கிறார்கள்.வடக்கு நோக்கிய குதிரை வீரன், கருப்பர் வாயில் காட்டுக் கருப்பர் சந்நதிக்கானது. இக்கோபுரத்தின் மேல் மிரட்டும் விழிகள், கொடுவாள் மீசை, அரிவாளோடு கருப்பர் உக்கிரக்காட்சி அளிக்கிறார். உள்ளே சிறு கோபுரங்கள் கொண்ட தனிச் சந்நதிகளில் பிள்ளையார், வள்ளி, தெய்வானை சமேத முருகன் மற்றும் பைரவர் அருள்பாலிக்கிறார்கள்..ஆலயத்தின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கிய கோஷ்ட தெய்வங்களாக காட்டுக்கருப்பருக்கு வலப்பக்கம் நொண்டிக்கருப்பர், காளியம்மன், பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் ஆகியோர் ஒரு சன்னதியிலும், காட்டுக்கருப்பருக்கு இடப்பக்கம் இன்னொரு சந்நதியில் சின்னக் கருப்பர், வீரபத்திரர், சப்தகன்னியர், அரசமுகம், சன்னியாசி ஆகியோரும் காட்சி அளிக்கிறார்கள்.அய்யனார் சந்நதிக்கு எதிரே அவரது வாகனமான யானையும், அதன்பின் பலிபீடமும் உள்ளது. பக்கவாட்டில் இரு யானைகளும், அய்யனார் சந்நதியின் இருபுறம் புடைப்புச் சிற்பமாக துவாரபாலகர்களும் காட்சி அளிக்கிறார்கள். கருப்பர் சந்நதியின் முன்னும் சுதையால் ஆன யானைகளும் புரவி எடுப்பில் கொண்டு வந்து வைக்கப்பட்ட அரிவாளும் கதையும் ஏந்திய கருப்பர் சிலைகளும் காட்சியளிக்கின்றன. அய்யனார் சந்நதியின் பக்கவாட்டில் ஒன்பது மணிகள் கட்டப்பட்டுள்ளன. பூஜை நேரத்தில் அவை ஓங்கி ஒலிப்பது நமக்குள் சன்னதம் பெருக்கும். முன்னோடி என்ற தெய்வத்துக்குப் பக்கவாட்டில் மடைப்பள்ளி உள்ளது..நெற்கழனிகளைக் காக்கும் அய்யனாருக்குப் பிரியமான விஷயம் அன்னதானம் செய்வது. ஆகையால் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கும் அனைவரும் வருடாவருடம் நரியங்குடிக்கு வந்து மகேஸ்வர பூஜை நடத்தி அன்னதானம் செய்கிறார்கள்.இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புரவி எடுப்பு விழா நரியங்குடியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது காடு கழனி செழிக்க மழை வேண்டி நிகழ்த்தப்படுகின்றது. இதில் முதல்நாள் இரண்டு பூதங்களும் இரண்டு புரவிகளும் அத்துடன் பத்துப் பசுக்களும் ஒரு காளையும் கொம்பு, கொட்டு, சுருட்டி, எக்காளம் ஒலிக்கக் சுமந்து வரப்பட்டு மந்தையில் வைக்கப்படுகின்றன..மறுநாள் கொடி, குடை, ஆலவட்டம் சூழ கருப்பருடன் இவை அனைத்தும் மேளதாளம், வாணவேடிக்கையோடு ஊர்வலமாக ஊரைச் சுற்றி வந்து கோவிலில் சேர்க்கப்படுகின்றன. அங்கே அய்யனார், கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வண்ண மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகின்றது.இந்த ஊர்வலத்தில் ஊர்மக்கள் புரவிகள், பூதங்கள், கருப்பருக்குச் சிறப்புச் செய்கின்றார்கள். திருமண வேண்டுதல் செய்து கொண்ட இளைஞர்கள் பசுக்கள், காளைகள் உருவாரத்தை தங்கள் தலைமேல் வைத்துச் சுமந்து வந்து கோவிலில் சேர்க்கின்றார்கள்.இப்புரவி எடுப்பு நான்கு நிகழ்வுகளாக நடைபெறும். புரவி எடுப்பு சம்பந்தமாக நாள் குறிப்பதை நாள் கொட்டுதல் என்பார்கள். அதற்கடுத்து புரவி செய்ய வேளாரிடம் அல்லது குயவரிடம் பிடிமண் எடுத்துக் கொடுப்பதை சேங்கை வெட்டுதல் என்பார்கள். அடுத்து புரவி வனைவதை உருவாரம் எடுத்தல் என்பார்கள். முடிவில் குறித்த நாளில் புரவிகள், பூதங்கள் சூழ கருப்பரைக் கோவிலில் கொண்டு வருவதை புரவி எடுத்தல் என்பார்கள். கோவிலைச் சுற்றி தீர்த்தப்பூரணி ஐயர் ஊரணியும், முனி ஐயா தோப்பு ஊரணியும் உள்ளது.வைகாசியில் கருப்பருக்குப் புரவி எடுப்பு என்றால், மாசியில் அய்யனாருக்கு சிவராத்திரி சிறப்பு. அன்று இக்கோவிலை குலதெய்வமாகக் கொண்டவர்களும், சுற்றியுள்ள ஊர்க்காரர்களும் வண்டி கட்டிக்கொண்டு இங்கே வந்து சமைத்துண்டு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். சிவ ராத்திரிக்கு அடுத்த நாள் பாரி வேட்டை. கோவிலை அடுத்துள்ள கம்மாய்க்கு அருகிலுள்ள பெரிய புளியமரத்தின் அருகில் பாரி வேட்டைக்கான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெறும்.நரியங்குடியில் உள்ள உகந்தம் என்னும் குளத்துக்கு இராமாயணத்தோடு தொடர்பு உண்டு என்கிறார்கள். இங்கே மிதிலைக் கண்மாய் என்ற ஒன்றும் இருக்கிறது.முழுக்க முழுக்க ஊராரின் பொறுப்பிலேயே கோவில் இருக்கிறது. கருப்பர், அய்யனார் பேரில் சிந்து, விருத்தம், அழைப்பு, கொலு முதலிய பாக்கள் யாக்கப்பட்டுள்ளன. மணப்பேறு, மகப்பேறுக்காகவும், இழந்த சொத்துகளை மீட்கவும், திருடுபோன பொருட்கள் திரும்பக் கிடைக்கவும், ஆபத்துகளில் இருந்து காக்கவும் நரியங்குடி அய்யனாரையும் காட்டுக்கருப்பரையும் வழிபட்டு பலர் பலனடைந்துள்ளனர்..எங்கே இருக்கு?சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வந்து அங்கிருந்து பட்டமங்கலம் வரவேண்டும். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் நரியங்குடியில் கோவில் உள்ளது.தரிசன நேரம்காலை 8 - மதியம் 12. விழா நாட்களில் காலையிலிருந்து மாலை வரை திறந்திருக்கும்.