தேவாரப் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் ஆலயம்.புராணத்துடன் தொடர்புடைய தலம். ஒருசமயம், பிரம்மாவிடம் வரம் பெற்ற ஆணவத்தில் விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லை தாங்காமல் தங்களைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. மீண்டும் தனக்கு தேவலோகத் தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன் இத்தலம் வந்தான். அடர்ந்த காட்டின் மத்தியில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக் கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்குக் காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காகச் செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும், அதற்கு பாவபலன் கிடையாது” என்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராகக் காட்சி தருகிறார்..இனி கோயிலின் அமைப்பு பற்றிப் பார்ப்போம். முன்னால் சிறிய கோபுரம் காட்சிதர, உள்ளே சென்றால் தனி மண்டபத்தில் நந்தியும், மகாமண்டபத்தில் அகிலாண்ட நாயகி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை. மூலஸ்தானத்தில் சுவாமி சதுரப்பீடத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காட்டழகர் என்றும் இவருக்குப் பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார்.சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இங்கு ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் ராஜயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிராகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர். எனவே இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூஷிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு இவருக்கு வாகனமாக இருப்பதால் மூஷிக வாகனம் இல்லை என்கிறார்கள். ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியின் அருகில் மகாகாளர் சிவவழிபாட்டிற்காக சங்கு ஊதிக்கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது. மூலவரின் மேல் உள்ள விமானம் துவிதளம் எனப்படும். பிராகாரத்தில்கபாலீஸ்வரர், சக்கரேஸ்வரர், திருப்புள்ளீஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரமேஸ்வரர், முனீஸ்வரர் என ஆறு லிங்கங்கள் இருக்கிறது. இதில் திருப்புள்ளீஸ்வரர், அகஸ்தீஸ்வரர் இருவரும் ஒரே ஆவுடையில் இருப்பது சிறப்பு. சேர்ந்திருக்கும் இருவரையும் 54 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் மறுபிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆண்டு திருவிழாக்களில் மகாசிவராத்திரியும், கந்தசஷ்டியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். நான்கு காலத்திலும் வாசனை திரவியங்கள் மற்றும் பூக்களால் அபிஷேகம் செய்து மகேசனை மனம் குளிரச் செய்கிறார்கள். கந்தசஷ்டி அன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் அன்று மகாஅபிஷேகம் நடைபெற்று மதியம் எம்பெருமான் தரிசனம் தருவார். விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள் செய்து படைத்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்..ஆரண்யேஸ்வரருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து வழிபட்டால் இழந்த பதவியைத் திரும்பப் பெறலாம், தெரியாமல் செய்த பாவம் நீங்கும், தாமதமாகிக்கொண்டு வரும் பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை. திருவெண்காடு புதன் தலத்திற்குச் செல்லும் பொழுது அதன் அருகே இருக்கும் இவ்வாலயத்துக்கும் சென்று வழிபாடு செய்யுங்கள். அளவில்லா பலன்களைப் பெறுங்கள். எங்கே இருக்கு?மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. தரிசன நேரம்காலை 8 – 11; மாலை 5 – இரவு 7.
தேவாரப் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் ஆலயம்.புராணத்துடன் தொடர்புடைய தலம். ஒருசமயம், பிரம்மாவிடம் வரம் பெற்ற ஆணவத்தில் விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லை தாங்காமல் தங்களைக் காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. மீண்டும் தனக்கு தேவலோகத் தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன் இத்தலம் வந்தான். அடர்ந்த காட்டின் மத்தியில் சிவன் சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக் கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்குக் காட்சி தந்த சிவன், “நியாயத்திற்காகச் செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும், அதற்கு பாவபலன் கிடையாது” என்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராகக் காட்சி தருகிறார்..இனி கோயிலின் அமைப்பு பற்றிப் பார்ப்போம். முன்னால் சிறிய கோபுரம் காட்சிதர, உள்ளே சென்றால் தனி மண்டபத்தில் நந்தியும், மகாமண்டபத்தில் அகிலாண்ட நாயகி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை. மூலஸ்தானத்தில் சுவாமி சதுரப்பீடத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காட்டழகர் என்றும் இவருக்குப் பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார்.சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இங்கு ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் ராஜயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிராகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர். எனவே இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூஷிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு இவருக்கு வாகனமாக இருப்பதால் மூஷிக வாகனம் இல்லை என்கிறார்கள். ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியின் அருகில் மகாகாளர் சிவவழிபாட்டிற்காக சங்கு ஊதிக்கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது. மூலவரின் மேல் உள்ள விமானம் துவிதளம் எனப்படும். பிராகாரத்தில்கபாலீஸ்வரர், சக்கரேஸ்வரர், திருப்புள்ளீஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரமேஸ்வரர், முனீஸ்வரர் என ஆறு லிங்கங்கள் இருக்கிறது. இதில் திருப்புள்ளீஸ்வரர், அகஸ்தீஸ்வரர் இருவரும் ஒரே ஆவுடையில் இருப்பது சிறப்பு. சேர்ந்திருக்கும் இருவரையும் 54 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் மறுபிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆண்டு திருவிழாக்களில் மகாசிவராத்திரியும், கந்தசஷ்டியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். நான்கு காலத்திலும் வாசனை திரவியங்கள் மற்றும் பூக்களால் அபிஷேகம் செய்து மகேசனை மனம் குளிரச் செய்கிறார்கள். கந்தசஷ்டி அன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் அன்று மகாஅபிஷேகம் நடைபெற்று மதியம் எம்பெருமான் தரிசனம் தருவார். விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள் செய்து படைத்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள்..ஆரண்யேஸ்வரருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து வழிபட்டால் இழந்த பதவியைத் திரும்பப் பெறலாம், தெரியாமல் செய்த பாவம் நீங்கும், தாமதமாகிக்கொண்டு வரும் பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை. திருவெண்காடு புதன் தலத்திற்குச் செல்லும் பொழுது அதன் அருகே இருக்கும் இவ்வாலயத்துக்கும் சென்று வழிபாடு செய்யுங்கள். அளவில்லா பலன்களைப் பெறுங்கள். எங்கே இருக்கு?மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ., சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. தரிசன நேரம்காலை 8 – 11; மாலை 5 – இரவு 7.