உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சூா்ய காந்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்றார்
Supreme Court Justice Surya Kant

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக பதவி வகித்த பி.ஆர். கவா​யின் பதவிக்காலம்  முடிவடைந்ததை தொடர்ந்து உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக சூர்ய காந்த் பதவியேற்றுள்ளார். 

தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். இவரைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சூா்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிப்பாா். 2027-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9-இல் தனது 65 வயது நிறைவில் அவர் ஓய்வு பெறுவார்.

கடந்த 1962-ம் ஆண்டு பிப்​ர​வரி 10-ம் தேதி ஹரி​யா​னா​வின் ஹிசார் பகு​தி​யில் சூர்ய காந்த் பிறந்​தார். ஹிசா​ரில் பள்​ளிப் படிப்​பு, கல்​லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்​தக் மற்​றும்குருஷேத்​திரா பல்​கலைக்​கழகத்​தில் எல்​எல்​பி, எல்​எல்​எம் சட்​டப் படிப்​பு​களை படித்​தார்.

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கு உள்ளிட்ட பல முக்கியத் தீா்ப்புகளை வழங்கிய அமா்வுகளில் நீதிபதி சூா்ய காந்த் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

                        

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow