கார்த்திகை தீபம் ஏற்பாடுகள் தீவிரம் : மகாதீபத்திற்கு அண்ணாமலையார் கோயிலில் 4,500 லிட்டர் நெய் கொள்முதல்!

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 லிட்டர் நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் ஏற்பாடுகள் தீவிரம் : மகாதீபத்திற்கு அண்ணாமலையார் கோயிலில் 4,500 லிட்டர் நெய் கொள்முதல்!
4,500 லிட்டர் நெய் கொள்முதல்

 

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்​ணா​மலை​யார் கோயி​லில் கார்த்​திகை தீபத் திரு​விழா வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. தொடர்ந்து நடை​பெறும் 10 நாட்​கள் விழா​வின் முக்​கிய நிகழ்​வான பரணி தீபம் டிச. 3-ம் தேதி அதி​காலை ஏற்​றப்​பட உள்ளது.

அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்​புறம் 2 ஆயிரத்து 668 அடி உயர​முள்ள தீபமலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​படும். மகா தீபம் ஏற்​று​வதற்​காக ஆயிரத்து 500 மீட்​டர் காடாதுணி, 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்​படுத்​தப்​படும்.

இந்த மகா தீபம் 11 நாட்​கள் பக்​தர்​களுக்கு காட்சி அளிக்கும். இந்​நிலை​யில், மகா தீபம் ஏற்​று​வதற்​காக கோயில் நிர்​வாகம் சார்​பில் ஆவின் நிறு​வனத்​திலிருந்து 4 ஆயிரத்து 500 கிலோ நெய் கொள்​முதல் செய்​யப்​பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்​பட்​டது.

தீபத் திரு​விழா கொடியேற்​றத்​துக்கு முன்​பாக ஊர்​காவல் தெய்​வ​மான துர்க்​கை​யம்​மன் உற்​சவம், பிடாரி அம்​மன் மற்​றும் விநாயகர் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இன்று இரவு துர்​க்கை​யம்​மன் உற்​சவம், நாளை இரவு பிடாரி அம்​மன் உற்​சவம் விமர்சையாக  நடை​பெற உள்ளது. இந்த நிகழ்வுகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow