Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61
Kumudam.com, Kumudam Jothidam - ராசி பலன்கள்

Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam Jothidam
தலையங்கம்
சிறப்புகட்டுரை
கேள்வி பதில்
ராசி பலன்கள்
மற்றவை
 
 19.03.10    ராசி பலன்கள்


(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் கேது; சுக ஸ்தானத்தில் செவ்வாய்; ருண ஸ்தானத்தில் சனி(வ); பாக்கிய ஸ்தானத்தில் ராகு; லாப ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; விரய ஸ்தானத்தில் சுக்கிரன். குரு சுபமாகச் சஞ்சரிக்கிறது. பணப்புழக்கம் தொடர்ந்து தாராளமாகவே இருந்துவரும். சமுதாயத்தில் அந்தஸ்துமிக்கவர்களின் தொடர்பும், அதனால் செய்தொழிலில் நல்ல ஆதாயமும் ஏற்படும்.குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக ஒரு கணிசமான தொகை செலவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புதன் சாதகமாக உள்ளதால் உற்றார், உறவினரால் நன்மைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்காகவும் செலவுகள் ஏற்படலாம். ஆடை, ஆபரணங்கள் சேரும். அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.

உத்தியோகம் : பணியிடத்தில் நிலைமை மேம்படும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வழிகள் பிறக்கும்.

தொழில் : தொழிலுக்குத் தேவைப்படும் நிதிஉதவிகள் தேடிவரும். புதிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.

வியாபாரம் : விற்பனை தொடர்ந்து முன்னேறும். லாபம் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : சுக்கிரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது வருமானத்திற்குக் குறைவிராது. பெண்களாலும் நன்மைகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : உங்கள் ஜெனனகால ஜாதகத்தைப் பொறுத்து பொறுப்புள்ள பதவி ஒன்று கிடைக்க சாத்தியக்கூறு உள்ளது. வருமானம் உயரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

விவசாயத்துறையினர் : தொழில் சீராக இருக்கும். வருமானம் உயரும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் நன்றாக இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : செலவுகள் அதிகரிக்கும். எனவே சிக்கன நடவடிக்கை அவசியம்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டியாய்ப் பணி செய்மட நெஞ்சமே.             

  - திருநாவுக்கரசர்

 அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 19, 20
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 16, 17, 18
அதிர்ஷ்ட எண்கள் : 4, 6

(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் கேது; தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ); அஷ்டம ஸ்தானத்தில் ராகு; ஜீவன ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; லாப ஸ்தானத்தில் சுக்கிரன். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ). பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்காக எதிர்பார்த்ததைவிட அதிகம் விரயமாகும். அல்லது பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.10-ல் குரு சஞ்சரிப்பதால் தொழில் விஷயங்களில் பொறுமை தேவை. சூரியன், சாதகமாக மாறுகிறது. எடுத்த காரியங்கள் தடைகளின்றி நிறைவேறும். அந்தஸ்துமிக்கவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். சுக்கிரனால் பெண்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

உத்தியோகம் : பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். எனவே யோசித்து பின்னர் முடிவெடுக்கவும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வழிகள் பிறக்கும்.

தொழில் : தொழில் வளர்ச்சியில் தடைகள் இராது. உற்பத்தி உயரும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் சீராக இருந்துவரும்.

கலைத்துறையினர் : சுக்கிரன் சாதகமாக சஞ்சரிக்கிறார். எனவே பெண்களால் நன்மைகள் உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதுப்பட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணவரவும், வசதிகளும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நிகழும். வருமானம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : செவ்வாய் தைரிய ஸ்தானத்தில். மனதில் தைரியமும், உற்சாகமும் பெருகும். தொழிலில் தடைகள் நீங்கும். எனவே தொழில் இனி மேம்படும். வருமானம் உயரும். மண், மனை இவற்றால் ஆதாயங்கள் உண்டாகும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியிடத்தில் மேன்மை உண்டாகும்.

அறிவுரை : குழந்தைகளின் கல்வி, உடல்நலனில் அக்கறை தேவை. செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

ஆட்டினாயடியேன் விளையாயின
ஓட்டினாயொரு காதி லிலங்குவெண்
தோட்டினாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீ பணி செய்மட நெஞ்சமே.   
               
- திருநாவுக்கரசர்

அனுகூல தினங்கள் : மார்ச் : 17, 18, 19
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16, 20
அதிர்ஷ்ட எண்கள் : 2, 5

(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஷென்ம ராசியில் கேது; குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்; சுக ஸ்தானத்தில் சனி(வ); சப்தம ஸ்தானத்தில் ராகு; பாக்கிய ஸ்தானத்தில் குரு, சூரியன், புதன், சந்திரன்; ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன். சுக ஸ்தானத்தில் சனி வக்கிரம். வேலை மற்றும் தொழில்துறையினருக்கு ஏதாவது பிரச்சினைகள் எழக்கூடும். எனவே பொறுமையும், நிதானமும் தேவைப்படும். நீதிமன்ற வழக்குகளில் அனுகூலம் இருக்காது. எடுத்த காரியங்களில் தடைகளும், தாமதமும் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்து குருவால் நன்மைகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும். அரசாங்கத்தாலும் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தினருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பத்தில் சுக்கிரன் நன்மை தராது. தொழிலில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

உத்தியோகம் : பதவியில் உள்ளவர்களுக்குச் சலுகைகள் கிடைக்கும்.

தொழில் : ஜென்மத்தில் கேது; 2-ல் செவ்வாய்; 4-ல் சனி; 7-ல் ராகு. எனவே தொழிலில் பிரச்சினைகள் எழக்கூடும். எனினும் தொழில் பாதிக்கப்படாது. உற்பத்தியும், வருமானமும் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், வருமானமும் சீராக இருக்கும்.

கலைத்துறையினர் : நீங்கள் எதிர்பார்த்திருந்த புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் பாதிக்கப்படலாம்.

அரசியல்துறையினர் : மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசுவதைத் தவிர்த்துவிட வேண்டும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் காணப்பட்ட மந்தநிலை தொடரக்கூடும். வருமானம் சற்று குறையும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் சீராக இருக்கும். உத்தியோகத்திலுள்ள பெண்மணிகளுக்குப் பணியிடத்தில் மேன்மை உண்டாகும்.

அறிவுரை :குடும்பத்தில் கணவன்-மனைவியரிடையே பிணக்குகள் தோன்றக்கூடும். எனவே விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் :கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை,மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வரவும்.

குலந்தருஞ் செல்வம் தந்திடுமடியார்
படு துயராயின வெல்லாம் 
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெரு நிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்.     
        
- பெரியதிருமொழி

அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16, 20
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 17, 18, 19
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9



(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம் : ஜென்ம ராசியில் செவ்வாய்; தைரிய ஸ்தானத்தில் சனி(வ); ருண ஸ்தானத்தில் ராகு; அஷ்டம ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன்; விரய ஸ்தானத்தில் கேது. சனி சாதகமாகச் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்கள் தடைகளின்றி நிறைவேறும். பெரியவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் அதிகமாகும். திருமண வாய்ப்புகள் நிறைவேறும்.சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்லது. தொழிலில் முன்னேற்றமிருக்கும். கல்வியில் ஆர்வமும், தேர்ச்சியும் ஏற்படும். பெண்களால் சுகம் ஏற்படும்.

உத்தியோகம் : உங்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

தொழில் : தொழில்துறையினருக்குப் பிரச்சினைகள் ஏற்படும். தொழில் முன்னேற்றம் பாதிக்கப்படாது. புதிய பணிகளுக்கான ஆர்டர்கள் கிடைக்கும். எனவே உற்பத்தியும், வருமானமும் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், வருமானமும் உயரும். ஆயினும் வரவேண்டிய பணம் வசூலாவதும், கொடுக்கல்-வாங்கலும் தாமதப்படும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளன. புதிய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : நிலைமை மேம்படும். வருமானம் நல்லபடி இருந்துவரும்.

மாணவமணிகள் : படிப்பில் ஆர்வம் நல்லபடி இருக்கும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் மந்தநிலை தொடரக்கூடும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அறிவுரை : எதைச் செய்தாலும் பொறுமை தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை, நாளும்
எந்தாயென இமையோர் தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய்! உனதடியேற் கருள்புரியே.      
     
- பெரியதிருமொழி

அனுகூல தினங்கள் : மார்ச் : 17, 18, 19
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16, 20
அதிர்ஷ்ட எண்கள் : 3, 7


(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் சனி(வ); பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு; சப்தம ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன்; லாப ஸ்தானத்தில் கேது; விரய ஸ்தானத்தில் செவ்வாய். அஷ்டம ஸ்தானத்திற்கு சூரியன் மாறுகிறார். வேலை காரணமாக பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலும், சோர்வும் அதிகரிக்கும். பெண்களால் தொல்லைகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றலாம். எனவே கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பொறுமையுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியமாகும். எடுத்த காரியங்களில் தடைகளும், தாமதமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சனி குடும்ப ஸ்தானத்தில். எனவே பேச்சில் நிதானம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். சிலர் வேலை, தொழில் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

உத்தியோகம் : பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க சாத்தியக்கூறு உண்டு.

தொழில் : தொழில்துறையில் உள்ளவர்களுக்குச் சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆயினும் தொழிலில் பாதிப்பு இராது. எனவே ஒப்பந்தப் பணிகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

வியாபாரம் : வியாபாரம் தொடர்ந்து முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக உள்ளன. எனவே எதிர்பார்த்திருந்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும், வசதிகளும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : பொறுமையும், பேச்சில் நிதானமும் தேவை. வருமானம் சுமாராக இருக்கும்.

மாணவமணிகள் : படிப்பில் தடைகள் ஏற்படாது.

விவசாயத்துறையினர் : 12-ல் செவ்வாய். தொழிலில் தேக்கநிலை நீடிக்கும். வருமானம் குறையும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கக்கூடும். உத்தியோகம் பார்க்கும் பெண்மணிகளுக்கு முன்னேற்றமிருக்கும். என்றாலும் பொறுமையோடு செயல்பட வேண்டும்.

அறிவுரை : செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

ஏத்துகின்றோம் நாத்த
ழும்ப இராமன் திருநாமம்,
சோத்தம் நம்பீ! சுக்கி
ரீவா! உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை
யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடு
கின்றோம் குழமணி தூரமே.            

 - பெரியதிருமொழி

அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 19, 20
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 15, 16, 17, 18
அதிர்ஷ்ட எண்கள் : 5, 9



(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஜென்ம ராசியில் சனி(வ); சுக ஸ்தானத்தில் ராகு; ருண ஸ்தானத்தில் குரு; சூரியன், சந்திரன், புதன்; சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன்; ஜீவன ஸ்தானத்தில் கேது; லாப ஸ்தானத்தில் செவ்வாய்; 1-ல் சனி; 4-ல் ராகு; 6-ல் குரு. நன்மை செய்யும் சஞ்சாரமல்ல. உடல்நலனில் அதிக கவனம் கொள்ளவேண்டும். ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். எடுக்கும் காரியங்களில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிப்பது நல்லதே. எனவே பெண்களால் நன்மைகள் உண்டாகும். வாழ்வில் முன்னேற்றமும், வசதிப் பெருக்கமும் ஏற்படும். நல்ல நண்பர்கள் சேர்க்கையால் ஆதாயம் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு, நிலம் போன்றவற்றால் ஆதாயம் ஏற்படும்.

உத்தியோகம் : பணிகளில் மிகுந்த கவனம் வேண்டும். நீங்கள் செய்யும் பணிகளில் தடைகளும், தவறுகளும் ஏற்படக்கூடும். எனவே பொறுமையுடன் செல்வது அவசியம்.

தொழில் : தொழில்துறையினருக்கும் மிகுந்த பொறுமை தேவை. தொழில் முன்னேற்றம் நீடிக்கும். வருமானம் நல்லபடி நீடிக்கும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் நன்றாக இருந்துவரும்.

கலைத்துறையினர் : கிரகநிலைகள் சாதகமாக மாறியுள்ளன. எனவே புதுப்பட வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். பணவரவு அதிகரிக்கும். வசதிகளும் கூடுதலாகும்.

அரசியல்துறையினர் : கட்சிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெயரும், புகழும் பெருகும். வருமானம் உயரத் தொடங்கும்.

மாணவமணிகள் : படிப்பில் முன்னேற்றம் தடைபடாது. எனினும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் முன்னேற்றம் தொடரும். வருமானம் உயரும். மண், மனை இவற்றால் ஆதாயங்கள் உண்டாகும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் சீராக இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமையும், நிதானமும் தேவை.

அறிவுரை : பிரச்சினைகள் நீங்கும்.

பரிகாரம் : தினமும் காலை, மாலை இரு வேளைகளும்  கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

ஓயாத அரக்கனொடிந் தலற
நீயா ரருள் செய்து நிகழ்ந்தவனே
வாயா ரவழுத்துவர் நாகேச்சரத்
தாயே யென வல்வினை தானறுமே!    
            
  - திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16, 17
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 18, 19, 20



(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் வரை)

குடும்பம் : தைரிய ஸ்தானத்தில் ராகு; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; ருண ஸ்தானத்தில் சுக்கிரன்; பாக்கிய ஸ்தானத்தில் கேது; ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய்; விரய ஸ்தானத்தில் சனி;12-ல் சனி; சஞ்சரிப்பதால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். திடீர் செலவுகளும் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகளும், தாமதமும் ஏற்படும். மற்றவர்கள் உங்களை ஏமாற்றக்கூடும். எனவே எச்சரிக்கை தேவை. பத்தில் செவ்வாய். வேலைகள் அதிகமாகும். இதனால் நல்லதும், கெட்டதுமான பலன்கள் ஏற்படும். பணம், பொருட்கள் களவு போகக்கூடும். பலவழிகளிலும் பணம் விரயமாகக்கூடும். தொழிலில் விருக்தியும், வருமானப் பெருக்கமும் ஏற்படும். 

உத்தியோகம் : வேலைப்பளு அதிகரிக்கும். பொறுப்புகளும் கூடும். இதனால் மனநிம்மதி குறையும்.

தொழில் : பிரச்சினைகள் ஏற்படக்கூடும். என்றாலும் தொழில் முன்னேற்றம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. வருமானம் அதிகரிக்கும்.

வியாபாரம் : வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபம் பெருகும். என்றாலும் உங்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வசூல் தாமதப்படும். வருமானம் குறையும். கொடுக்கல், வாங்கலும் சிரமம் தரும்.

கலைத்துறையினர் : சுக்கிரன் ருண ஸ்தானத்தில். எனவே வாய்ப்புகள் தாமதப்படலாம். வருமானம் சற்று குறையலாம்.

அரசியல்துறையினர் : கட்சியில் குழப்பங்கள் ஏற்படலாம். எனவே பேச்சில் நிதானமும், பொறுமையும் மிகவும் அவசியம். வருமானம் சற்று குறையலாம்.

மாணவமணிகள் : படிப்பில் முன்னேற்றம் தடைபடாது. வருமானம் உயரக்கூடும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் தேக்கநிலை தொடரும். வருமானம் குறையும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் சீராகவே இருந்துவரும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : உத்தியோகத்தில் தொழிலில் பொறுமையும், நிதானமும் தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

முத்தினை முழுவயிரத்திரள் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமிலாத விளக்காய்
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனையடைய வல்லார் இல்லை யல்லலே.              

   - திருஞானசம்பந்தர்
    
அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 17, 18
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 16, 19, 20
அதிர்ஷ்ட எண்கள் : 3, 4



(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் ராகு; சுக ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன்; அஷ்டம ஸ்தானத்தில் கேது; பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்; லாப ஸ்தானத்தில் சனி(வ). சனி அனுகூலமாகச் சஞ்சரிக்கிறார்.எனவே வேலை மற்றும் தொழில்துறையினருக்கு ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்ந்து நீடிக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு தென்படுகிறது. இதுவரை வசூலாகாமல் நின்ற பணம் இனி வசூலாகும். வீடு, சொத்து இவற்றால் செலவுகள் ஏற்படலாம். தாயின் உடல்நலனில் அக்கறை தேவை.  சுக்கிரன் ஐந்தாமிடமாகிய மீனத்தில் இருப்பது நல்லதே. எதிர்பாராத பணவரவு ஏற்படலாம். உயர்ந்தவர்களின் நட்பு ஏற்படும். அதனால் பல நன்மைகள் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.

உத்தியோகம் : பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். பதவி உயர்வையும், ஊதிய உயர்வையும் பெறமுடியும்.

தொழில் : தொழிலில் முன்னேற்றம் தொடரும். புதிய பணிகளுக்கான கான்டிராக்டுகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : மிகவும் அனுகூலமான காலகட்டமிது. திடீர் பணவரவிற்கு இடமுண்டு. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் உயரும். வசதிகள் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : கட்சியிலும், மக்களிடையேயும் ஆதரவு பெருகும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

விவசாயத்துறையினர் : தொழில் சிறக்கும். வருமானம் பெருகும்.

பெண்மணிகள் :  குடும்ப வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்திலுள்ள பெண்மணிகள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

அறிவுரை : பிரச்சினைகள் அகலும். நன்மைகள் பெருகும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

இடரினுந் தளரினு மெனதுறு நோய்
தொடரினு முனகழல் தொழுதெழுவேன்
கடல் தனிலமுதொடு கலந்த நஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
இதுவோ எமையாளுமா றீவ தொன்றெமக் கில்லையேல்
அதுவோ வுனதின்ன ருளாவடுதுறை யரனே.               

   - திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16, 20
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 17, 18, 19
அதிர்ஷ்ட எண்கள் : 2, 6



(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் வரை)

குடும்பம் : ஜென்ம ராசியில் ராகு; தைரிய ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; சுக ஸ்தானத்தில் சுக்கிரன்; சப்தம ஸ்தானத்தில் கேது; அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்; ஜீவன ஸ்தானத்தில் சனி(வ); சூரியன் மீன ராசிக்கு மாறவுள்ளார். 4-ல் சூரியன் சஞ்சரிப்பது நன்மையை அளிக்காது. உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். எடுக்கும் காரியங்கள் தாமதப்படக்கூடும். குரு மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. செலவுகள் அதிகரிக்கலாம். சில தருணங்களில் வரவைவிட செலவுகள் அதிகரிக்கக்கூடும். வேலை, தொழிலில் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில்துறையினர் நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகளின் கல்வி, உடல்நலனில் கவனம் வேண்டும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீடு, வாகனம், சொத்து இவற்றால் பிரச்சினைகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம்.

உத்தியோகம் : வேலையில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது பிரச்சினைகள் எழக்கூடும்.

தொழில் : தொழில்துறையில் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும்.பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொளவ்து அவசியம். என்றாலும் தொழில் பாதிக்கப்படாது. வருமானம் சீராக இருக்கும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் சுமாராக இருக்கும்.

கலைத்துறையினர் : 4-ம் இடமாகிய சுகஸ்தானத்தில் சுக்கிரன். தொழில் மேம்படும். நடிக, நடிகையர் நல்ல ஆதாயம் பெறுவர். வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : அரசியல்வாதிகளுக்குப் பொறுப்புள்ள பதவி கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. வருமானம் அதிகரிக்கும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

விவசாயத்துறையினர் : தொழிலில் காணப்பட்ட பின்னடைவு தொடரக்கூடும். வருமானம் பாதிக்கப்படும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

அறிவுரை : 1-ல் ராகு; 3-ல் குரு; 8-ல் செவ்வாய்; 10-ல் சனி. எனவே வேலை, தொழிலில் பொறுமை தேவை. செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : தடங்கல்கள் நீங்கி, சகல காரியங்களும் நிறைவேற  கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினு முனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமையாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருளாவடுதுறை யரனே.                   

- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : மார்ச் : 16, 17, 18
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 19, 20
அதிர்ஷ்ட எண்கள் : 5, 9



(உத்திராடம் 2-ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரை)

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன்; ருண ஸ்தானத்தில் கேது; சப்தம ஸ்தானத்தில் செவ்வாய்; பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ); விரய ஸ்தானத்தில் ராகு. குடும்ப ஸ்தானத்தில் சூரியன். மூன்றாம் இடத்திற்கு மாறவுள்ளார். இது நல்லதே. குடும்ப வருமானம் அதிகரிக்கும். மூன்றாமிடமாகிய மீன ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்லதே. உடல் ஆரோக்கியம் சீராகும். நெருங்கிய நண்பர்கள், உற்றார், உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பகைவர்கள் தொல்லைகள் குறையும். ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் மகிழ்ச்சி நிலவும். சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மையைத் தராது. நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு இராது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

உத்தியோகம் : அலுவலகத்தில் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

தொழில் : கூட்டுத் தொழில் செய்பவர்கள் பொருளாதார விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உற்பத்தியும், வருமானமும் சீராக இருந்துவரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் நல்லபடி நீடிக்கும்.

கலைத்துறையினர் : புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். வசதிகளும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் : பெயரும், புகழும் ஓங்கும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல ஆர்வமும், ஈடுபாடும் இருக்கும்.

விவசாயத்துறையினர் : தொழிலில் பின்னடைவு தொடரும். வருமானம் சற்று பாதிக்கப்படலாம்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பொறுமை தேவை.

அறிவுரை : பொறுமையும், நிதானமும் தேவை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

உற்ற வுறுபிணி நோய்காள்!
உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின்,
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றே னின்னம்
ஆழ்வினை காள், உமக்கிங்கோர்
பற்றில்லை கண்டீர் நடமின்
பண்டன்று பட்டினங் காப்பே.      
           
- பெரியாழ்வார் திருமொழி

அனுகூல தினங்கள் : மார்ச் : 16, 17, 18
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 19, 20
அதிர்ஷ்ட எண்கள் : 7, 9



(அவிட்டம் 3-ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் வரை)

குடும்பம் : ஜென்ம ராசியில் குரு, சூரியன், சந்திரன், புதன்; குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன்; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது; ருண ஸ்தானத்தில் செவ்வாய்; அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ); லாப ஸ்தானத்தில் ராகு. குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கவிருப்பது நன்மை தராது. உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். மனக்கவலைகள் அதிகரிக்கும். முன்கோபமும், கடுகடுப்பான பேச்சும் ஏற்படக்கூடும்.எனவே பேச்சில் இனிமையும், பொறுமையும் அவசியம்.குடும்பத்தில் கணவன்-மனைவி உறவில் பிணக்குகள் தோன்றக்கூடும்.ஜென்ம ஸ்தான குருவும் நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றக்கூடும். குடும்ப ஸ்தானமாகிய மீனத்தில் சுக்கிரன். பணவரவு பல வழிகளில் இருக்கும். வேலை, தொழிலில் விருத்தி இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், அதனால் ஆதாயங்களும் ஏற்படும். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகம் : உங்கள் வேலையில் மிகுந்த கவனம் வேண்டும். காரணம் உங்களது பணிகளில் தவறுகள் ஏற்படும் என்பதே.

தொழில் : தொழிலதிபர்களுக்கும் சிரமங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் தொழில் பாதிக்கப்படாது. உற்பத்தி பெருகும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் : நடிக, நடிகையர் நல்ல ஆதாயம் பெறுவர். புதுப்பட வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும்.

அரசியல்துறையினர் : 2-ல் சூரியன் சஞ்சரிக்கவிருக்கிறார். வாக்கு, தனம் குடும்ப ஸ்தானத்தில் சூரியன். எனவே முன்கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கட்சியைக் குறைகூறிப் பேசாதீர்கள். வருமானம் சீராக இருக்கும்.

மாணவமணிகள் : கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விவசாயத்துறையினர் : 6-ல் செவ்வாய். நன்மைகள் அதிகரிக்கும். பகைவர் விலகுவர். தொழில் மேம்படும். வருமானம் சிறக்கும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் பெருகும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்குப் பணியில் பொறுமை தேவை.

அறிவுரை : 8-ல் சனி. எனவே வேலை, தொழிலில் கவனம் தேவை. உடல்நலனிலும் கவனம் வேண்டும்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்துவாருங்கள்.

மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.    
              
- திருஞானசம்பந்தர்

அனுகூல தினங்கள் : மார்ச் : 17, 18, 19, 20
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16
அதிர்ஷ்ட எண்கள் : 4, 6
அதிர்ஷ்ட எண்கள் : 1, 2



(பூரட்டாதி 4-ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம் : ஜென்ம ராசியில் சுக்கிரன்; சுக ஸ்தானத்தில் கேது; பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்; சப்தம ஸ்தானத்தில் சனி(வ); ஜீவன ஸ்தானத்தில் ராகு; விரய ஸ்தானத்தில் குரு, சூரியன், சந்திரன், புதன்; 12-ல் குரு, சந்திரன், புதன். செலவுகள் தொடர்ந்து அதிகமாகவே இருந்துவரும். பயணங்கள் செல்லவேண்டிவரும். இதனால் உடலும், உள்ளமும் சோர்வுறக்கூடும். குழந்தைகளின் கல்வி, உடல்நலனுக்காக அதிகம் செலவாகும். அரசால் நன்மைகள் இராது. உற்றார், உறவினர்களால் உதவிகள் இராது. சுக்கிரன் ஜென்ம ராசியில். ஆடை, ஆபரணங்கள் சேரும். பெண்களால் பணம் விரயமாகும். செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில். உடல்நலன் பாதிக்கப்படலாம். பணம், பொருட்கள் களவு போகலாம்.

உத்தியோகம் : வேலை அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். இதை பொறுமையுடன் சிந்தித்து பின்னர் ஒப்புக்கொள்ளுங்கள்.

தொழில் : தொழிலுக்கு நிதிஉதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும்.

வியாபாரம் : விற்பனையும், லாபமும் சீராக இருந்துவரும்.

கலைத்துறையினர் : பெண்களால் அனுகூலம் உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல ஆதாயங்களும் ஏற்படும். எனவே நல்ல வருமானம் தரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

அரசியல்துறையினர் : பெயரும், புகழும் ஓங்கும். வருமானம் உயரும்.

மாணவமணிகள் : படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

விவசாயத்துறையினர் : கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றுள்ளார். எனவே தொழிலில் மந்தநிலை தொடரும். வருமானம் குறையும்.

பெண்மணிகள் : குடும்ப வருமானம் அதிகரிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு மாற்றங்கள் ஏற்படும்.

அறிவுரை : மாற்றங்களைப் பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள். மனைவியுடன் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வாருங்கள்.

கோலால் நிரை மேய்த்த எங்கோ வலர் கோவே,
நாலா கியவே தியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, என் வல்வினை தீர்த்தருளாயே.

- திருமங்கையாழ்வார்

அனுகூல தினங்கள் : மார்ச் : 14, 15, 16, 20
பிரதிகூல தினங்கள் : மார்ச் : 17, 18, 19
அதிர்ஷ்ட எண்கள் : 1, 3

Current Issue
18-05-2012
Previous Issue
11-05-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.