பெருந்தன்மை விக்ரம்
தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் வல்லினம் மரியான்ஆறு கோடியிலும், மரியான் மரியான் பதினைந்து கோடியிலும், ஐ படத்தை 80 கோடியிலும் உருவாக்கி வருவதாக தகவல் . இவ்வளவு பிரமாண்டமாக படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் அனுபவம் மிக்க தயாரிப்பாளரான அவருக்கே கலக்கம் வருகிற மாதிரி அதிர்ச்சி தருகிறார்களாம் விநியோகஸ்தர்கள் தெளிவாக சொல்வதென்றால் அவரது தயாரிப்பில் உருவாகி வெளியிடத் தயாராக இருக்கும் மரியான், மற்றும் வல்லினம் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் சொல்லும் விலை தான் அவரை கலக்கப் படுத்தியதாம் சமீபத்தில் வெளியான நகுல் நடித்த படம் ஓடவில்லை. ஆடுகளம் படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்த எந்த படமும் ஓடவில்லை. அதுவுமில்லாமல் தியேட்டர்களுக்கே மக்கள் வர தயங்கும் இந்த சூழலில் எந்த நம்பிக்கையில் இந்த இரு படங்களையும் வாங்குறது என்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்..இதைக்கேட்டு சற்றே கடுப்பான ஆஸ்கர் ரவிச்சந்திரன், இந்த இரண்டு படங்களை யார் வாங்குறீங்களோ, அவங்களுக்குதான் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ 'படத்தை தருவேன் என்கிறாராம்.. இதற்கிடையில் ஐ படத்தின் பட்ஜெட் 140 கோடி என்று ஆஸ்கர் தரப்பு தகவல் சொல்ல.... பட்ஜெட் 80 தானே? எதுக்காக இவ்வளவு ஏத்தி சொல்றாங்க.என்று முணுமுணுக்கிறாராம் ஷங்கர். இதில் முக்கியமான விஷயம் இன்னொன்றும் இருக்கிறதாம் . 'ஐ 'படத்தில் நடிப்பதற்காக விக்ரமுக்கும் சம்பளம் என தனியாக கிடையாது என்றும் படம் வியாபாரம் ஆனதும் அதில் குறிப்பிட்ட சதவீதம் உங்களுக்கு என்று சொல்லியிருக்கிறார்களாம். விக்ரமும் பெருந்தன்மையோடு நடித்துக்கொண்டிருக்கிறாராம் . ஆக, சுறா மீனைக் காட்டி சின்ன மீன்களை விற்கவேண்டிய காலமாகிடுச்சி என்கிறது கோடம்பாக்கம் தகவல்
மீண்டும்-விஜய்-முருகதாஸ் கூட்டணி
துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது அந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்க இருப்பதாக தகவல் . இதுவரை முருகதாஸ் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்து வந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆனால் இந்த முறை முருகதாஸ் விஜய் இணையும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்கிறார்கள்சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான எதிர்நீச்சல் உள்ளிட்ட படப் பாடல்கள் செம ஹிட் என்பதால் முருகதாஸ் படத்திற்கு இசையமைக்கும் பட்டியலில் அனிருத் முதலிடத்தில் இருக்கிறார் என்கிறார்கள்
அனன்யா நடிக்கும்-புலிவால்
நடிகை அனன்யா நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களில் நடித்தவர்.. திடீரென தமிழ் சினிமாவை தவிர்த்துவிட்டு சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்றார். அங்கே அனன்யாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஆஞ்சநேயன் என்பருக்கும் திருமணம் நிச்சயமானது. ஆனால் ஆஞ்சநேயன் திருமணமானவர் என அனன்யாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இருந்தாலும் அனன்யா அவரை திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு கணவரின் நிபந்தனையின் பேரில் இனி மலையாள படங்களில் மட்டுமே நடிப்பேன்-என்றவர்
இப்போது மீண்டும் தமிழில் விமல், பிரசன்னா இணைந்து நடிக்கும் ‘புலிவால்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் . ஏற்கனவே இந்த படத்தில் நடிகை ஓவியாவும், இனியாவும் நடிக்கிறார்கள் இருந்தாலும் அனன்யாவின் நடிப்புக்கே இப்படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்திருக்கும் அனன்யா எந்த மாற்றமும் இல்லாமல் அன்று போல் இன்றும் எல்லோரிடத்திலும் சகஜமாக பழகுவது ஆச்சர்யம் என்கிறார் ஒரு தயாரிப்பு நிர்வாகி
குத்து பாடலுக்கு சம்மதித்த-லட்சுமிராய்
நடிகை லட்சுமிராய் ஹீரோயினாக நடித்த காஞ்சனா படம் பெரிய ஹிட். என்றாலும் லட்சுமிராய்க்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை..அதன்பிறகு ஒன்பதுல குரு படத்தில் நடித்தார் ஆனாலும் வாய்ப்புகள் பெரியளவில் இல்லை என்பதால் தற்போது கன்னடப் படங்களிலும் தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார் .தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக அஞ்சலி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் பலுபு என்ற படத்தில் குத்து பாடல் ஒன்றிற்கு நடனமாடுவதற்கு தகுந்த நடிகையை அப்படக் குழுவினர் தேடி வந்தார்களாம் இதனையறிந்த லட்சுமிராய் தானாகவே முன் வந்து குத்து பாடலுக்கு தான் நடனமாட சம்மதித்திருக்கிறாராம். மேலும் இப்பாடலில் ஆடுவதற்கு பெரிதாக பணத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றாராம் ஆந்திராவில் முன்னணி நடிகரான ரவிதேஜா போன்ற நடிகர்களுடன் நடித்தால் அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதற்காகவே பணத்தை பற்றியெல்லாம் யோசிக்காமல் சட்டென குத்தாட்டம் போட சம்மதித்திருக்கிறாராம் லட்சுமிராய்.
ஜெகஜால புஜபல தெனாலிராமன்- வடிவேலு
கைப்புள்ள நடிகர் வடிவேல், 2 வருடங்களுக்குப்பின் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது, சரித்திர பின்னணி படம் என்பதால் இப்படத்திற்கு 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் . இதில் கிருஷ்ண தேவராயராகவும், தெனாலிராமனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் வடிவேல்யுவராஜ் தயாளன் டைரக்டு செய்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில், வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க ஏகப்பட்ட ஹீரோயின்களை அணுகினார்களாம்..ஆனால், கைப்புள்ளக்கு கட்டம் சரியானாலும் நடிப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என கழன்று கொண்டார்களாம் கடைசியில் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மீனாட்சி தீட்சித் கதாநாயகியாக நடிக்க ஒ கே சொல்லிவிட்டார் . .இவர் ஏற்கனவே ஒரு இந்தி படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் விஜயகாந்த இயக்கி நடித்த ‘விருதகிரி’ படத்திலும் ஹீரோயினாக நடித்தவர். ஜாடிக்கேத்த மூடி கிடைத்துவிட்டது. இனியென்ன ஷூட்டிங் தான் ? இதோ படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஏவி.எம். ஸ்டூடியோவில், 2 வருட இடைவெளிக்குப்பின், ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’படத்திற்காக ‘மேக்கப்’ போட்டு நடித்தார் வடிவேல். இம்சை அரசன் இருபத்திமூன்றாம் புலிகேசியை நினைவு படுத்தும் விதமாக ஒரு தர்பார் அரங்கு அமைக்கப்பட்டு அதில் வடிவேலுவுடன் சில குழந்தைகள் நடித்த பாடல் காட்சி படமானது. ஆஹா கைப்புள்ள மீண்டும் காலத்துல இறங்கிட்டார்யா என வடிவேலுவை தினமும் ஏராளமானோர் வாழ்த்துகிறார்களாம்
எஸ்.ஜே.சூர்யா இயக்கும்-இசை
வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே ஆகிய படங்களை தந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது, 'இசை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியாக புதுமுகம் சாவித்ரி நடிக்கிறார்.இது, 2 இசையமைப்பாளர்களை பற்றிய கதையாம் . அதில் ஒருவர், மூத்த இசையமைப்பாளர். இன்னொருவர், இளைஞர். இரண்டு பேருக்கும் இடையேயான தொழில் போட்டிதான் கதையின் முக்கிய கருவாம். மூத்த இசையமைப்பாளராக நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இளைய இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இளையராஜாவையும், ஏ.ஆர்.ரகுமானையும் முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, கதை பின்னப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது . அந்த இரு இசையமைப்பாளர்களின் இசையில் பணியாற்றிய இயக்குனர்களாக நடிப்பதற்கு இன்றைய முன்னணி இயக்குனர்களான கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், பிரபு சாலமன், விஷ்ணுவர்தன், வெற்றி மாறன், ராஜு சுந்தரம் ஆகிய ஏழு இயக்குனர்களிடம் கதை சொல்லி நடிக்க கேட்ட பொது உடனே அவர்கள் நடிக்க சம்மதம் என்றார்களாம் . அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது என்கிறார் எஸ்.ஜே.சூர்யா
கிரிக்கெட் சூதாட்டத்தின் கதை படமாகிறது
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ..ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் மூலம் மேலும் பிரபலமாகிவிட்டார் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில் ஒரு படம் தயாராக உள்ளது. அந்த படத்துக்கு 'கிரிக்கெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சாஜி கைலாஸ், ஏ.கே.சாஜன் இருவரும் சேர்ந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள். கதை- வசனத்தை சாஜன் எழுதுகிறார்.. ''கிரிக்கெட் ''கதை பற்றி படத்தயாரிப்பாளர் சாஜி கைலாஸ் சொன்னது இதுதான் ''இந்த படம் கேரள இளைஞன் ஒருவனின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றியது. கேரளாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆல்- ரவுண்டராக இருக்கும் ஒரு வாலிபன் கடின உழைப்பால் உச்சத்துக்கு வருகிறான். புகழ்பெற்ற பிறகு பேராசை காரணமாக அவன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறான். இதனால் வாழ்க்கையில் கடை மட்டத்துக்கு தள்ளப்படுகிறான். இதைத்தான் படமாக தயாரிக்கப் போகிறோம். ஸ்ரீசாந்தின் இந்த நிலைக்கு அவரது பேராசையே காரணமாகும். இதற்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீசாந்த் மட்டுமே இதற்கு பொறுப்பு. முன்னுக்கு வரத் துடிக்கும் இன்றைய இளைஞர்கள் சிலர் தங்கள் லட்சியத்தை நிறைவேற்ற இப்படி மாறி விடுகிறார்கள்.இந்த செய்தியை கிரிக்கெட் படத்தில் வலுவாக சொல்ல உள்ளோம்.என்கிறார் சாஜி கைலாஸ்
|